புதுதில்லி, மார்ச் 12- 2021-22 ஆம் நிதியாண்டிற்கு உரிய- தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.50 சதவிகிதத்திலிருந்து 8.10 சதவிகி தமாக குறைத்து, மோடி அரசு தொழி லாளர்களை வஞ்சித்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் பி.எப். அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டம், கவுகாத்தி யில் நடைபெற்றது. இந்தக் கூட் டத்தில்தான் 2021-22 நிதியாண்டிற் கான இபிஎப் வட்டியை 8.10 சத விகிதமாக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் நாட்டின் மிகப் பெரிய ஓய்வூதிய நிதி மற்றும் சுமார் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புடைய இரண் டாவது பெரிய வங்கி சாரா நிதி நிறு வனமாகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான உறுப்பி னர்கள் உள்ளனர். இருபது தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களில் மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு இபிஎப் பிடித்தம் செய்யப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.
அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவிகிதம் ஊழியர்களின் பங்களிப்பாகவும் 12 சதவிகிதம் சம்பந்தப்பட்ட நிறு வனத்தின் பங்களிப்பாகவும் இபிஎப் வாரியத்தில் செலுத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்த 24 சதவிகித பங்களிப்பில் ஒரு பகுதி ஓய்வூதியத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தில் இணைந்த தொழிலாளர்களுக்கு, ஏனைய சேமிப்புத் திட்டங்களைக் காட்டிலும் அதிகமாக அதிகபட்ச வட்டி வழங் கப்பட்டு வந்தது. 2001 முதல் 2005 வரை யிலான ஆண்டுகளில் 9.50 சதவிகி தம் என்ற அளவிற்கு வட்டி வழங்கப் பட்டது. இது 2005-2010 வரையிலான காலத்தில் 8.50 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதன்பின்னர் 2010-11 நிதி யாண்டில் 9.50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு, 2011-12 நிதி யாண்டில் 8.25 சதவிகிதமாக சுமார் 1.25 சதவிகிதம் குறைக்கப்பட்டது.
2012-13 நிதியாண்டில் 8.50 சதவிகி தம், 2013-15 வரை 8.75 சதவிகிதம், 2015-16 நிதியாண்டில் 8.80 சதவிகி தம், 2016-17 நிதியாண்டில் 8.65 சத விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவிகிதம், 2018-19 நிதியாண்டில் 8.65 சதவிகிதம், 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு 8.50 சதவிகிதம் என்று வட்டி வழங்கப்பட்டது. ஆனால், 2021-22 நிதியாண்டிற்கு அது 8.10 சதவிகிதமாக குறைக்கப் பட்டுள்ளது. இபிஎப் மூலமாக 1977-78 நிதி யாண்டில்தான் 8 சதவிகிதம் என்ற குறைந்தபட்ச வட்டி விகிதம் நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, இப்போதுதான் 8.10 என்ற அளவிற்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. 8.10 சதவிகிதம் என்ற இந்த பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்ச ரவை அங்கீகாரம் அளித்தவுடன் பய னாளர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.