பாட்னா, மார்ச் 15- பீகார் சட்டப்பேரவையில், சபா நாயகர் விஜய் குமார் சின்ஹாவுடன் முதல்வர் நிதிஷ் குமார் வாக்குவாதத் தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம், லக்கிசராய் பகுதி யில் மதுவிலக்கு சட்டத்தை மீறிய குற் றத்தின் பேரில் ஏராளமானோரை மாநில காவல்துறை கைது செய்த நிலையில், பாஜக-வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். லக்கிச ராய் தொகுதி பாஜக எம்எல்ஏ-வும் சட்டப்பேரவைத் தலைவருமான விஜய் குமார் சின்ஹா கைதானவர்களின் குடும்பத்தினரை நேரிலேயே சென்று சந்தித்தார். அப்போது, லக்கிசராய் துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் அந்தப் பகுதி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட காவலா்கள் சட் டப்பேரவைத் தலைவர் விஜய் குமார் சின்ஹாவை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாக குற்றச் சாட்டு எழுந்தது.
இதனையும் பாஜக-வினர் விவகாரமாக்கினர். இதனிடையே, திங்களன்று பீகார் சட்டப்பேரவை கூடிய நிலையில், இந்த விவகாரத்தை எழுப்பிய சட்டப்பேர வைத் தலைவா் சின்ஹா, லக்கிசராய் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார். இது முதல்வர் நிதிஷ் குமாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, தனது இருக்கை யிலிருந்து எழுந்த முதல்வர் நிதிஷ் குமார், “இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பேரவை உரிமைக் குழு வும் விசாரித்து வருகிறது. அமைச்சரும் இதுபற்றி விளக்கம் அளித்து விட்டார். அதன்பிறகும் அவரைப் பதிலளிக்கு மாறு அவைத்தலைவர் வலியுறுத்து வது சட்டத்துக்குப் புறம்பானது” என்று குறிப்பிட்டார். மேலும், “அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளின்படி, சட்டப்பேர வைத் தலைவர் நடந்துகொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் தலை யிட சட்டப் பேரவைக்கு அதிகாரம் உள்ளதா? என தெரியவில்லை. மாநி லத்தில் 4 முறை முதல்வராக இருந் துள்ளேன். இத்தகைய ஒழுங்கீனம் அவையில் இதுவரை நடைபெற்ற தில்லை. தயவுசெய்து இந்த முறையில் அவையை நடத்தாதீா்கள்” என்றும் காட்டமாக கூறினார். ஆனால், “லக்கிச ராய் விவகாரம் குறித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருவதால், அதுதொடா்பான விசா ரணை விவரங்களை அவையில் தெரி விக்க வேண்டியது அவசியமாகிறது” என்று அவைத்தலைவர் விஜய்குமார் சின்ஹா குறிப்பிட்டார். இது சட்டப்பேரவையில் பர பரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநி லத்தில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணிக்குள் இருக்கும் மோதலை யே இந்த வாக்குவாதம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருந்தது.