புதுதில்லி, மார்ச் 15- 2021-22 நிதியாண்டின் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் நாட் டின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக் குறை 13.5 லட்சம் கோடியாக அதி கரித்துள்ளது. 2020 பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி அள விற்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசமே வர்த்த கப் பற்றாக்குறை என்று அழைக்கப் படுகிறது. அந்த வகையில், 2022 பிப்ர வரியில், இந்தியாவின் ஏற்றுமதி 25.1 சதவிகிதம் அதிகரித்து 34.57 பில்லி யன் டாலர் (ரூ. 2.66 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்கள் வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. எனினும், இதே காலத்தில் இறக்குமதியும் 36 சதவிகிதம் அதி கரித்து 55.45 பில்லியன் டாலராக (ரூ. 4.27 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.
இதில் கச்சா எண்ணெய் இறக்கு மதி மட்டும் 69 சதவிகிதம் அதி கரித்து, 15.28 பில்லியன் டாலர் அள விற்கு உயர்ந்துள்ளது. இவற்றின் காரணமாக, இந்தியா வின் வர்த்தகப் பற்றாக்குறை 2022 பிப்ரவரியில் மட்டும் 20.88 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 1 லட்சத்து 66 ஆயி ரம் கோடி) உயர்ந்துள்ளது என்று ஒன்றிய அரசின் வர்த்தக அமைச்ச கம் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத் தில், ஏற்றுமதி 28 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள அதே நேரத்தில் இறக்குமதி, 42 லட்சத்து 39 ஆயிரம் கோடியாக அதிகரித்துள் ளது. இதன்மூலம் கடந்த 2021-22 நிதி யாண்டின் 11 மாதங்களில் ஒட்டு மொத்த வர்த்தகப் பற்றாக்குறை 13 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபா யாக உயர்ந்துள்ளது.
ஆர்பிஐ வரம்பைத் தாண்டியது சில்லரை விலைப் பணவீக்கம்!
நாட்டின் மொத்த விலை மற்றும் சில்லரை விலைப் பணவீக்கமும் 2022 பிப்ரவரியில் உயர்ந்துள்ளது. மொத்தவிலைப் பணவீக்கம் 2021 டிசம்பரில் 13.56 சதவிகிதமாக வும், 2022 ஜனவரியில் 12.96 சதவிகித மாகவும், இருந்த நிலையில், 2022 பிப்ரவரியில், 13.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, 2022 பிப்ரவரியில் சில்லரை விலைப் பணவீக்கமும் 6.07 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் சில்லரை விலை பண வீக்கத்துக்கு ரிசர்வ் வங்கி நிர்ண யித்திருந்த அதிகபட்ச வரம்பான 6 சதவிகிதத்தை சில்லரை விலைப் பணவீக்கம் தாண்டியுள்ளது. மொத்த விலை பணவீக்க அதி கரிப்புக்கு எண்ணெய், உலோகம், ரசாயனம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உண வுப் பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக இருந்துள்ளது.
இந்தியாவில், பிப்ரவரியில் சமையல் எண்ணெய் (Edible Oil) இறக்குமதி 23 சதவிகிதம் அதி கரித்து 9 லட்சத்து 83 ஆயிரத்து 608 டன்னாக உயர்ந்துள்ளது. அதே போல சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதியும் அதிகரித்து உள்ள தாக இந்திய கரைப்பான் பிரித்தெ டுப்பாளர்கள் சங்கம்(Solvent Extractors’ Association of India -SEA) தெரிவித்துள்ளது. சில்லரை விலை பணவீக்கத் திற்கு, எண்ணெய் மற்றும் இதர எண்ணெய்ப் பொருள்களின் பண வீக்க விகிதம் சுமார் 16.44 சதவிகி தம் உயர்ந்ததால் ஏற்பட்ட உணவுப் பொருள் பணவீக்கமே காரணம் என்று தெரியவந்துள்ளது. காய்கறியின் பணவீக்க விகிதம் சுமார் 6.13 சதவிகிதம், இறைச்சி, மீன் ஆகியவற்றின் பணவீக்க விகிதம் சுமார் 7.45 சதவிகிதம், முட்டை பண வீக்க விகிதம் சுமார் 4.15 சதவிகிதம், தானியங்கள் மற்றும் இதரப் பொருட்களின் பணவீக்க விகிதம் சுமார் 3.95 சதவிகிதம், சர்க்கரை, மிட்டாய் முதலான பொருள்களின் பணவீக்க விகிதம் சுமார் 5.41 சத விகிதம் என உயர்ந்துள்ளது.