புதுதில்லி, டிச. 28 - இந்தியா முழுவதும், ஆதர வற்ற குழந்தைகளுக்கான இல் லங்கள், பள்ளிக் கூடங்கள், எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக் கான நலவாழ்வு மையங்கள், இல வச உணவு வழங்குமிடங்கள் ஆகி யவற்றை நிறுவி, தன்வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர் அன்னை தெரசா. அத்தகை சிறப்பு வாய்ந்த பெண்மணியால் 1950-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ தொண்டு நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் இதற்கான கிளை நிறுவனங்கள் உள்ளன. அவை காப்பகங்கள், நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’யின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஒன் றிய அரசு முடக்கி இருப்பதாக ஊட கங்களில் செய்திகள் வெளியாகின. '
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் தரப்பிலிருந்து கண்டனங்களும் எழுந்தன. ஆனால், அந்தக் குற்றச் சாட்டை உள்துறை அமைச்சகம் மறுத்தது. ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’யும் “எங்கள் வங்கிக் கணக்குகளை முடக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிடவில்லை. நாங்களாகவேதான் கணக்கு களை முடக்கி வைக்குமாறு ஸ்டேட் பாங்க் இந்தியாவுக்கு கடிதம் எழுதினோம்” என்று தெரிவித்தது. இதன்மூலம் ஒன்றிய அரசின் பக்கம் எந்த தவறும் இல்லை என் பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், எதற்காக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்பட்டது? என்பதையும் ‘மிஷ னரிஸ் ஆப் சாரிட்டி’ தனது அறிக் கையில் தெரிவித்திருந்தது. அதில், தொண்டு நிறுவனங் கள் வெளிநாட்டு நிதிகள் அல் லது நன்கொடைகளைப் பெறு வதற்கு வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (Foreign contribution regulation Act)-2010, மற்றும் வெளிநாட்டுப் பங்க ளிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011-ன் கீழ் உள்துறை அமைச்ச கத்திடம் அனுமதி பெறுவது கட்டா யம் என்ற நிலையில், “மிஷனரிஸ் ஆப் சாரிட்டியின் புதுப்பித்தல் விண்ணப்பத்தை கடந்த 25-ஆம் தேதி ஒன்றிய அரசு நிராக ரித்து விட்டதாகவும்; இந்தப் பின் னணியிலேயே, பிரச்சனை தீரும் வரை, வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்குமாறு நாங்களே வங்கிக் கிளைக்கு கடிதம் அனுப்பி னோம்” என்றும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளது.