சீத்தாராம் யெச்சூரி பேச்சு
கொச்சி, அக்.22- வகுப்புவாதத்துக்கும் பாசி சத்திற்கும் எதிராக பாரதம் ஒன்று பட்டால் இந்தியா வெற்றி பெறும் என்பதுதான் ‘இந்தியா’ கூட்டணியின் முழக்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். ‘மலையாள மனோரமா’ நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த கருத்துரை மாநா ட்டில் கலந்துகொண்டு உரையாற்று கையில் அவர் மேலும் கூறியதாவது: நாட்டை வகுப்புவாத அடிப்படை யில் பிரித்து மதவாத நாடாக மாற்றும் நடவடிக்கையை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர்களின் ஒருங்கிணைந்த இயக்கத்தின் மூலம் எதிர்த்து முறி யடிப்பதே இடதுசாரிகளின் நோக்கம். இதன் மூலம் மட்டுமே மக்களுக்கு சமத்துவம், சமூக நீதி மற்றும் அரசியல்- பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த முடியும். மத அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் முயற்சித்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் மதப் பிளவும், போட்டியும் முடிவுக்கு வரவில்லை. அதன் தொடர்ச்சியையே இன்று நாட்டில் காண்கிறோம். மதச்சார்பின்மைக்கு எதிரான பாசிச இந்து நாடாக இந்தியாவை மாற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்ப்பவர்களை ஒருங்கிணைத்து உண்மையான இந்தியா என்றால் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்த வலுவான போராட்டம் கட்டி எழுப்பப்படும். நாட்டில் இடதுசாரிகளின் செல்வாக்கை தேர்தல் வெற்றியின் அடிப்படையில் மட்டும் அளவிட முடியாது. இடதுசாரிகள் முன்வைத்த முழக்கங்கள் வகுப்புவாதத்திற்கு எதி ராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் பேசினார்.