புதுதில்லி, ஜூன் 24- இந்தியாவில் “சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்” என்பதை முக்கியமான நோக்கமாகக் கொண்டுள் ளோம் என பிரதமர் மோடி தெரி வித்துள்ளார். ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக் கின்றன. இந்த அமைப்பின் 14-ஆவது மாநாடு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக வியாழனன்று துவங்கியது. சீன ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: தொற்றுநோயால் எழும் பொருளா தாரச் சிக்கல்களைச் சமாளிக்க, இந்தி யாவில் “சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்” என்பதை முக்கிய மான நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த அணுகுமுறை இந்தியப் பொருளா தாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
2022-ஆம் ஆண்டு 7.5 சதவீத வளர்ச்சியை எதிர் பார்க்கிறோம். வளர்ந்து வரும் ‘புதிய இந்தியாவில்’ ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உலக அரங்கில் இதுவரை கண்டி ராத வகையில் இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 2025-ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலராக உயரும். இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் 4.4 மில்லியன் நிபு ணர்கள் பணியாற்றுகின்றனர். இவர்க ளில் 36 சதவீதம் பெண்கள். இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும் யோசனைகள் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், பிரே சில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ, தென் ஆப்ரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ஆகியோரும் பேசினர்.