புதுதில்லி,பிப்.25- நாட்டின் தலைநகரமான தில்லியில் 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தில்லி காவல்துறை ஆணையாளர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 1,618 ஆக பதிவாகி இருந்தது. இது, கடந்த 2021 ஆம் ஆண்டில் 1,969 ஆக அதிகரித்துள்ளது. இது 21 சதவீதம் அதிகம் ஆகும். 98.78 சதவீதம் வரையிலான பாலியல் வன்முறை சம்பவங்கள் தெரிந்த நபர்களாலேயே நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.