வங்கிகளில் ரொக்கப் பண பரி வர்த்தனை செய்வோரின் விவ ரங்களை, வருமான வரித்துறை சேகரித்து வருகின்றது. இந்நிலையில், வங்கி வாடிக்கையாளர்கள் இனி 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேலான ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் அவர்களிடம், ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி, செல் போன் எண் போன்ற தகவல்களை, அதற்கான விண்ணப்பத்தில் பெற்ற பிறகே, ரொக்க பணம் செலுத்த அனு மதிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பான் நம்பர் இல்லாதவர்களிடம், சுய விபர விண்ணப்பம் பெற்ற பிறகே, பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற வருமான வரித்துறையின் இந்த உத்தரவு வாடிக்கை யாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.