states

img

ஒரே நாளில் 99 காசுகள் சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு!

மும்பை, பிப். 25 - உக்ரைன் - ரஷ்யா இடையிலான பதற்றம்  காரணமாக, கடந்த 6 வர்த்தக நாட்களாகவே,  இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தன.  இந்நிலையில், வியாழனன்று உக்ரைன்  விவகாரத்தில் ரஷ்யா ராணுவ நட வடிக்கைகளை துவங்கிய பின்னணியில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 2,702 புள்ளிகளும் (4.72  சதவிகிதம்) தேசிய பங்குச் சந்தைக் குறி யீட்டு எண்ணான நிப்டி, 815 புள்ளிகளும் (4.78 சதவிகிதம்) வீழ்ச்சி சரிந்தன. முதலீட்டா ளர்கள் ஒரே நாளில் ரூ.13.44 லட்சம் கோடி  இழப்பைச் சந்தித்தனர். சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை, பீப்பாய் 100 டாலர்களைத் தாண்டியது.  ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிரடியாக சவரனுக்கு, 1,856  ரூபாய் உயர்ந்தது. வங்கிகளுக்கு இடை யிலான அந்நியச் செலாவணிச் சந்தை யில் டாலருக்கு  இணையான இந்திய ரூபா யின் மதிப்பு 99 காசுகள் வீழ்ச்சி அடைந்து, 75 ரூபாய் 60 காசுகளுக்கு இறங்கியது. வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸ் 1328.61 புள்ளிகள் உயர்ந்து, 55 ஆயிரத்து 858.52 புள்ளிகளாகவும், நிப்டி 410.45 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 648 புள்ளிகளுக்கும் உயர்ந்தது. தங்கம் விலையும் கிராம் ஒன்றுக்கு 164 ரூபாய் விகிதம் ஒரேநாளில் சவரனுக்கு 1312 ரூபாய் குறைந்தது. டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு வெள்ளியன்று 75 ரூபாய் 309 காசுகளாக இருந்தது.