states

குன்னூர் விமான விபத்திற்கு காரணம் மோசமான வானிலை?

புதுதில்லி, ஜன.2- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்தா ண்டு டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி விமானப்படை க்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானி வருண் சிங்,  சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்கா மல் உயிரிழந்தார்.

இதனிடையே இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்திர சிங் தலை மையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக விமானத் தரவு ரெக்கார்டர் (FDR) மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் (CVR) ஆகியவை மீட்கப்பட்டு, விபத்துக்கு முந்தைய கடைசி தருணங்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சட்டப் பூர்வ ஆய்வறிக்கையை இறுதி செய்ய பத்து முதல் பதினைந்து நாட்களாகும் என பாது காப்புத்துறை அதிகார வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

விபத்து குறித்து  ஹெலிகாப்டர் பைலட் ஏர் வைஸ் மார்ஷல் மன்மோகன் பகதூர் (ஓய்வு)  கூறுகையில், “ பைலட்டின் கட்டுப்பாட்டில் ஹெலி காப்டர் இருந்துள்ளது. ஹெலிகாப்டர் முழுப் பாதுகாப்பானது.அந்த விமானத்தில் அனைத்துக் கருவிகளும் சரியாக உள்ளன. தவறான சூழ்நிலை  காரணமாக, ஹெலிகாப்டர் நிலப்பரப்பில் மோதியுள்ளது. மோசமான வானிலை காரணமாக, பனியின் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். மூத்த விமானி ஒருவரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.