states

காஷ்மீரில் 34 வெளி மாநிலத்தவர் சொத்து வாங்கியுள்ளனர்

புதுதில்லி, மார்ச் 30-  மோடி தலைமையிலான ஒன்றிய  பாஜக அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அந்த மாநிலத்தை பிரித்து சிதைத்தது. இதனைக் கண்டித்து  நாடு முழுவதும் போராட்டங்கள் நடை பெற்றன.  இந்நிலையில் காஷ்மீர் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பகுஜன் சமாஜ்கட்சி உறுப்பினர் ஹாஜி ஃபஸ் லுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், “கடந்த 2019 இல்  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு சலுகை அளிக்க வகை செய்யும் 370-வது பிரிவு 2 நீக்கப் பட்டது. அதையொட்டி அங்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சொத்துகளை வாங்க அனுமதி அளிக் கப்பட்டது. இவ்வாறு 370-வது பிரிவு நீக்கப் பட்ட பின்னர் ஜம்மு-காஷ்மீர் யூனி யன் பிரதேசத்தில் இதுவரை 34 வெளி மாநிலத் தவர் சொத்துக்களை வாங்கி யுள்ளனர். இதை ஜம்மு-காஷ்மீர் யூனி யன்பிரதேச நிர்வாகம் தெரிவித்துள் ளது. இந்த சொத்துக்கள் ஜம்மு,  ரியாசி, உதம்பூர், கந்தர்பால் மாவட் டங்களில் வாங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.