புதுதில்லி, நவ. 21 - இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை விட இந்தியாவுக்கு என்ன ஆனது? என்ற கவலை மக்களுக்கு ஏற்படத் துவங்கியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி யமைச்சருமான ப. சிதம்பரம் கூறி யுள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் ப. சிதம்பரம் மேலும் கூறியிருப்பதாவது: எங்கள் அரசாங்கத்தின் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 அரசாங்கம்) மீதான எனது விமர்சனம் என்ன வென்றால், நாங்கள் இரண்டாம் தலை முறை தலைமைத்துவத்தில் (இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வில்லை) முதலீடு செய்யவில்லை. 2009-இல் டாக்டர் மன்மோகன் சிங் மீண்டும் பதவிக்கு (பிரதமர்) வந்த பிறகு, அரசாங்கத்தின் படகில் ஒரு புதிய காற்றைக் கொடுக்க கல்வி, அனுபவம், சுறுசுறுப்பு மற்றும் புதிய யோசனைகளை கொண்ட இன்னும் நிறைய இளைஞர்களை அவர் இணைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த (மூத்த அமைச்சர்கள்) குழு முதல் ஐந்து ஆண்டுகளில் 8 சதவிகித (பொருளாதாரம்) வளர்ச்சியை வழங்கி யது, அது தொடரட்டும் என்று நாங்கள் நினைத்தோம்.
அது பெரிய தவறு. இரண்டாவது தவறு என்னவென்றால், நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றத்தை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை. அதேசமயம், இந்தியாவை சேதப்படுத்தும்- இந்தியாவின் பொரு ளாதாரத்துக்கு கேடு விளைவித்த தவறுகள், கல்விக்கு கேடு விளை வித்தல், இந்திய விளையாட்டுக்கு கேடு விளைவித்த தவறுகள் போன்ற எதை யும் நாங்கள் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 அரசாங்கம்) செய்ய வில்லை. இந்தியாவுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நாங்கள் எதையும் செய்யவில்லை. இந்தியாவின் கோட்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இந்தியா வில் என்ன நடக்கிறது என்பதை விட இந்தியாவுக்கு என்ன நடக்கிறது என்பதை பற்றி மக்கள் கவலைப்படு கிறார்கள் மற்றும் சிந்திக்கத் தொடங்கி யுள்ளனர். ஆனால் நாட்டில் பரவலான அச்சம் உள்ளது. சமூகத்தின் தூண்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருப்பதால் அச்சம் நிலவுகிறது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பலர் மாறுகிறார்கள். ஏனென்றால் தாங்கள் கட்சி மாறவில்லை என்றால் அவர்களும் தங்கள் குடும்பத்தினரும் துன்புறுத்தப் படுவார்கள் என்ற பயத்தில் உள்ள னர். இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ள னர்.