புதுதில்லி, டிச.30- 2021-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்ததாகவும், தமிழகத்தில் நான்கு புலிகள் உயிரிழ ந்துள்ளதாகவும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளி யிட்டுள்ள தரவுகளின்படி நாடு முழுவதும், 126 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் புலிகள் காப்பகம் என வரையறுக்கப்பட்ட பகுதிக்கு வெளியே 61 புலிகளும், புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்துள்ளது. மேலும், உயிரிழந்த மொத்த புலிகளில் 44 புலிகள் இளம் வயது புலிகள் ஆகும். உயிரிழந்த மொத்த புலிகளில் 35 புலிகள் இளம் வயது பெண் புலிகள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. 526 புலிகளை கொண்ட மத்தியப்பிரதேசத்தில் அதிகளவாக 41 புலிகளும், 312 புலிகளை கொண்ட மகாரா ஷ்டிராவில் 25 புலிகளும் இந்தாண்டு உயிரிழந்துள்ளன. 524 புலிகளை கொண்ட கர்நாடகாவில் 15 புலிகளும், 173 புலிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 9 புலிகளும் உயிரிழந்துள்ளன.