புதுதில்லி, ஏப்.23- இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற் படிப்பு மேற்கொள்ள வேண்டாம். அங்கு பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியன தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தா னில் உயர்கல்வி பயில யாரும் செல்ல வேண்டாம். இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயின்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லாது. மேலும் இந்தியாவில் அவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் முடியாது. இருப்பி னும், பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்ற புலம் பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் சான்றிதழ் அங்கீகரிக்கப்படும். அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் மத்திய உள்துறை அமைச்சகத் தின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே இங்கு உயர் கல்வியோ அல்லது வேலை வாய்ப்போ பெற முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் கண்டனக் குரல் எழுந்துள்ளது. எல்லா வெளிநாடுகளைப் போலவே பாகிஸ்தானையும் பாவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.