நிதியமைச்சகத்தால் “மிகவும் ஆபத்தான நிறுவனங்கள்” என்று அறிவிக்கப்பட்ட நிறுவ னங்களிடமிருந்தும் தேர்தல் பத்திர வசூல் வேட்டை நடத்தியி ருக்கிறது பாஜக. செந்தில் பாலாஜி போன்றவர்களைக் கைது செய்ய எந்த “பணச்சலவை தடுப்புச் சட்டம்” பயன்படுத்தப்பட்டதோ, அதே சட்டத்தின் விதிகளை மீறி யதால், வங்கி அல்லாத நிதி நிறு வனங்கள் பலவற்றை நிதிய மைச்சகம் “மிகவும் ஆபத்தா னவை” என்று அறிவித்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மிக அதிகமான பழைய நோட்டுகளை மாற்றியது உட்பட பல நடவடிக்கைகளின் அடிப்ப டையில் உருவாக்கப்பட்ட இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்க ளின் நிதி பரிவர்த்தனைகளை கவ னமாகக் கண்காணிக்க வேண் டும் என்று மத்திய நிதியமைச்சகத் தின் நிதி புலனாய்வுத்துறை கூறி யிருக்கிறது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த “மிகவும் ஆபத் தான” நிறுவனங்களில் ஒன்று, ரேணுகா இன்வெஸ்ட்மெண்ட் ஃபைனான்ஸ். இந்த நிறுவனம் 2019 ஏப்ரல் 12 அன்று ரூ.5 கோடிக்குத் தேர்தல் பத்திரங் களை வாங்கியுள்ளது. அந்தப் பத்திரங்களை ஏப்ரல் 20 அன்று பாஜக தன் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. ஏபிசி ஃபைனான்ஷியல் சர்வீ சஸ் என்ற நிறுவனமும் மிகவும் ஆபத்தான நிறுவனமாக அறி விக்கப்பட்ட நிறுவனம்தான். தேர்தல் பத்திரங்களை வாங்கிய பட்டியலில் இந்த நிறுவனம் இல்லை. ஆனால், ஏபிசி இந்தியா லிமிட்டெட் என்ற நிறுவனம் தேர் தல் பத்திரங்களை வாங்கியுள் ளது. கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்தின்படி, இரண்டு நிறுவனங்களுக்கும் முகவரி ஒன்றுதான். ஆக வேறு பெயரில் நிதியளித்திருக்கிறார் கள். இந்த நிறுவனம் வாங்கிய தேர்தல் பத்திரங்களும் பாஜக வின் கணக்கில்தான் வரவு வைக்கப்பட்டுள்ளன. திருடர்களையும் விரட்டி விரட்டி மாமூல் வசூலித்திருக்கிறார்கள் என்பதற்கான சிறு சாம்பிள்கள் தான் இவை! கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், “மிக வும் ஆபத்தான நிறுவனங்கள்” என்ற பட்டியல் 2018இல்தான் முதன்முறையாக வெளியிடப் பட்டது. அப்பட்டியலில் இடம் பெற்றவற்றில் 19 நிறுவனங்கள் 2018இலேயே தேர்தல் பத்திரங் கள் மூலம் நிதியளிக்கின்றன. அப்படி நிதியளித்தவற்றில் 18 நிறு வனங்கள், அடுத்த ஆண்டு களின் பட்டியலில் இல்லை! பாஜகவுக்கு நிதியளித்தால், பாய்ச னும் பாயசமாகும்!