states

img

ஜனாதிபதி பதவி உட்பட பாஜக தரும் எந்த பதவியையும் ஏற்கமாட்டேன்!

லக்னோ, மார்ச் 28 - சாதிய, முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சக்தி களுக்கு எதிரான கடுமையான போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும், குடி யரசுத் தலைவர் பதவி உட்பட பாஜக தரும் எந்தவொரு பதவி யையும் ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்றும் மாயாவதி கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடி வடைய உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு பாஜக உங் களை தேர்ந்தெடுத்தால், நீங்கள் ஏற்பீர்களா? என்று செய்தி யாளர் ஒருவர் மாயாவதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.  அதற்கு அளித்த பதி லில்தான், “பாஜகவிடம் பதவி யைப் பெற்றால் எங்கள் கட்சி யின் முடிவிற்கு அது காரணமாக அமைந்து விடும் என்று தெரிந் திருக்கும் நிலையில், நான் எப்படி அத்தகைய பதவியை ஏற்க முடியும். எனவே, எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தின் நலன் கருதி, பாஜக தரும் எந்த ஒரு வாய்ப்பையும் நான் ஏற்க மாட்டேன் என்பதை ஒவ்வொரு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிக் கும் தெளிவுபடுத்த விரும்பு கிறேன். பாஜக அல்லது பிற  கட்சிகளிடம் குடியரசுத் தலைவர் பதவியைப் பெற்றால், எதிர்காலத் தில் அவர்கள் என்னைத் தவ றாக வழிநடத்தக் கூடும்” என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் கன்சிராமின் உறுதியான சீடர் என்றும், கடந்த  காலத்தில் குடியரசுத் தலைவர் வாய்ப்பு தேடி வந்தபோது அவர்  அந்த வாய்ப்பை மறுத்ததாக வும் கூறியிருக்கும் மாயாவதி, “உ.பி.யில் தனது கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர, அனைத்து சாதிய, முதலா ளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் கடுமையான போராட்டத்திற்கும் மோதலு க்கும் தயாராகி வருகிறேன்” என் றும் மாயாவதி கூறியுள்ளார்.