“இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்வது எனக்கு தெரியாது” என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆச்சரியம் தெரிவித்திருந்தார். இந் நிலையில், “இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இவ்வளவு பற்றாக்குறை இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவும் அதிர்ச்சி வெளியிட்டுள் ளார். “மகிந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்விக்கான வளாகத்தை ஆரம்பிப்பது பற்றி நாம் ஏன் பரிசீலிக்கக் கூடாது?” என்றும் தனது நிறுவனத்தினரிடம் ஆலோசனையும் கேட்டுள்ளார்.