புதுதில்லி, ஏப்.6- உத்தரகண்ட் மாநிலம் ஹரித்து வாரில் `தரம் சன்சத்’ என்ற பெயரில், கடந்த 2021 டிசம்பர் மாதம் இந்துத் துவா அமைப்பினர் மாநாடு நடத்தி னர். இந்த மாநாட்டில், “இந்துக்கள் ஆயுதமேந்த வேண்டும்; இஸ்லாமி யர்களைப் படுகொலை செய்ய வேண் டும்” என்று வன்முறையைத் தூண்டிய வர் சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ் வதி ஆவார். அப்போது அவரது பேச்சிற்கு நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, உத்தரகண்ட் போலீசா ரால் தொடரப்பட்ட இரண்டு வழக்கு களின் பேரில், யதி நரசிங்கானந்த் 2022 ஜனவரி 15 அன்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். எனி னும், அடுத்த சில வாரங்களிலேயே பிப்ரவரி 8-ஆம் தேதி அவருக்கு ஜாமீ னும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், சாமியார் யதி நர சிங்கானந்த் இஸ்லாமியர்களுக்கு எதி ராக மீண்டும் வெறுப்பைக் கக்கி யுள்ளார்.
இந்தமுறை தில்லியில் நடை பெற்ற ‘இந்து மகாபஞ்சாயத்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய யதி நர சிங்கானந்த், “அடுத்த 20 ஆண்டு களில் இஸ்லாமியர் ஒருவர் இந்திய பிரதமராக பதவியேற்கக் கூடும். அப் படி இஸ்லாமியர் பிரதமரானால், 50 சதவிகித இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுவார்கள். 40 சதவிகிதம் பேர் கொல்லப்படுவார்கள். மீத முள்ள 10 சதவிதத்தினர் உள்நாட்டில் அகதிகள் முகாமிலோ அல்லது வெளி நாட்டிலோ தஞ்சம் அடைய நேரிடும். இந்த மோசமான நிலைமை ஏற்படா மல் இருக்க வேண்டுமானால், இந்துக் கள் இப்போதே ஆயுதம் ஏந்த வேண் டும்” மீண்டும் கொலைவெறியைத் தூண்டியுள்ளார். மேலும், “இந்துக்கள் அதிக குழந் தைகளைப் பெற வேண்டும். அவர் களுக்கு சண்டையிட கற்றுக்கொடுக்க வேண்டும். இந்துக்களும் முஸ்லிம் களும் சண்டையிடக் கூடாது என்பவர் கள், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை பார்க்க வேண்டும். அப்போதும் சண் டையிடக்கூடாது என்றால், காஷ்மீர் மக்கள் தங்கள் நிலத்தையும், மகள் களையும், சொத்துக்களையும் விட்டு வெளியேறுவது போல், நீங்கள் (இந்துக்கள்) தப்பித்து இந்தியப் பெருங்கடலில் மூழ்க வேண்டும். இது மட்டுமே உங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு” என்று கூறியுள்ளார்.
“சமூகங்களுக்கிடையில் வேறு பாட்டை உருவாக்குவதை நோக்க மாகக் கொண்ட எந்தவொரு நிகழ்வி லும் அல்லது கூட்டத்திலும் பங்கேற்க கூடாது” என்ற நிபந்தனையின் பேரி லேயே யதி நரசிங்கானந்திற்கு, ஹரித் துவார் வெறுப்புப் பேச்சு வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால், அந்த நிபந்தனையையும் மீறி, யதி நரசிங்கானந்த் தற்போது பேசியது, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலை யில், நரசிங்கானந்த் மீது ‘வெறுப்பு ணர்வை ஊட்டும் வகையில் பேசுதல்’ என்ற பிரிவின் கீழ் தில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் மானபங்கம் செய் தல், காயப்படுத்துதல் மற்றும் அப கரிப்பு முயற்சி ஆகிய குற்றச்சாட்டு களின் கீழும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும் யதி நரசிங்கானந்த் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக விடப்பட்டுள்ளார்.