சென்னை, மார்ச் 1- இயக்க செயற்பாட்டாளர்களிடம் அதிகார ஆணவத்துடன், மரியா தைக் குறைவாக நடந்துகொண்ட திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மீது மாநில வருவாய் நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி. டில்லிபாபு , மாநிலப் பொதுச்செய லாளர் இரா. சரவணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் இருளர், கொண்டா ரெட்டீஸ், காட்டுநாயக்கன், மலைக் குறவன் மற்றும் வேட்டைக்காரன் இன பழங்குடியின மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கா கவும் இலவச வீட்டுமனைப்பட்டா, அரசின் தொகுப்பு வீடுகள் மற்றும் இனச்சான்றிதழ் போன்ற கோரிக்கை களுக்காகவும் கடந்த 25 ஆண்டு காலமாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தொடர் போராட் டங்களை நடத்தி, இதன் மூலமாக, சில ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு உரிமை களையும், அரசின் திட்டங்களையும் பெற்றுத் தந்துள்ளோம். ஆனால், சில மாதங்களாக திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சில வருவாய்த்துறை அதிகாரிகள், பழங்குடி மக்கள் மத்தியில் பணி யாற்றிடும் தலைவர்களை - செயற் பாட்டாளர்களை, அதிகாரத் திமிரில் அராஜகமான வார்த்தைகளில் பேசுகின்றனர்.
இந்நிலையில் பழங்குடி மக்க ளது கோரிக்கைகள் தொடர்பாக முறையிட வந்த தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான தமிழர சன், தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஈ. கெங்காதுரை ஆகிய இருவரிடம் கடந்த 28.2.2024 அன்று திருவள்ளூர் மாவட்ட வரு வாய் அலுவலர் ஆ. இராஜ்குமார், ‘நீ என்ன டிரைபுளா, பழங்குடியா? எப்படி, பழங்குடிக்காக வர்றீங்க?’ என்றும், ‘வேட்டைக்காரன் பழங்குடி மக்களெல்லாம் யாரு?’ என்று மிகமரியாதை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளார். இதேபோலத்தான், கடந்த 2022-ஆம் ஆண்டு பொன்னேரி, வரு வாய் கோட்டாட்சியராக பணியாற்றிய செல்வன் என்பவ ரும், ‘நீங்கள் என்ன பழங்குடியா; இவர்களுக்காக போராட்டம் நடத்து றீங்க?’ என்று பேசியுள்ளார். இது போன்றே, சில வருவாய்த்துறை அதி காரிகள் சாதி ஆதிக்க மனோபாவத்து டன் ஆணவமாக நடந்துகொள்கின்ற னர். இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு வன்மையாக கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறது. பழங்குடி மக்கள் மத்தியில் தன்னலம் பாராமல் அர்ப்பணிப்பு டன் பணியாற்றும் செயற்பாட்டாளர் களை, திமிர்பிடித்த போக்கில் பேசிடும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாநில அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.