states

img

உயர்கல்வி அமைச்சரின் புறக்கணிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை, நவ.1- விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி அடாவடியாக மறுத்த நிலையில், இந்தப் போக்கினை கண்டித்து, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் எடுத்துள்ள முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், நூற் றாண்டினைக் கடந்த மக்  கள் தலைவருமான தோழர் என். சங்கரய்யா, நாட்டுக்காக பட்டப் படிப்பை துறந்தவர் என்ற நிலை யில், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என  பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இப்பரிந்துரையை ஏற்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் செனட் மற்றும் சிண்டி கேட் தீர்மானம் நிறைவேற்றி கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இந்த முடிவினை ஏற்க மறுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த கோப்பில் கையெழுத்திட மறுத்தார். கவுரவ டாக்டர் பட்டம் வழங்கு வது பல்கலைக்கழகத்தின் முடிவு  என்பதை பலமுறை வலியுறுத்தி யும் அதனை ஏற்காத ஆளுநருக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனக்  குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தீர்மானம் மீண்டும் ஒருமுறை ஆளுநரின்  ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆனால், அதில் கையெழுத்திடு வதை மீண்டும் அடாவடியாக மறுத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசமைப்புச் சட்டத்தின் படி செயல்பட வேண்டிய ஆளுநர், ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை மட்டுமே தனது முழு மூச்சாக முன்னெடுத்து வருவதுதான் இந்த மோசமான நிலைக்கு காரணமாகும். என்.சங்கரய்யாவின் தியாகத்தை ஆளுநர் அறிந்திருக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் சார்பு ஊடகங்கள்  சமாளிப்பாக எழுதிவந்தன. ஆனால், வேண்டுமென்றே இந்த அராஜகத்தில் அவர் ஈடுபட்டு வருவது வெளிப்படையாக தெரி கிறது. இந்திய கூட்டாட்சியில் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறிய அதிகாரம் எந்தவொரு தனி  நபருக்கும் கிடையாது. எனவே  பட்டமளிப்பு விழாவினை புறக்க ணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது, அர சின் கடுமையான கண்டனச் செய்தி யை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இந்த முடிவினை வர வேற்கிறது. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசின் முடிவு களுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் ஆளுநர், மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் செல்வது அவமானகரமான ஒன்றாகும். எனவே அவருக்கு கண்டனம் தெரி விக்கும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் கருப்புக் கொடியேந்தி கண்டனம் முழங்குவார்கள். தமிழ்நாட்டு  மக்கள் இந்த போராட்டத்திற்கு பேராதரவு வழங்கிட வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது.