புதுதில்லி, ஆக.11- பஜ்ரங் தள்- விசுவ ஹிந்து பரிசத் குண்டர்களால் ஹரி யானா மாநிலம் குர்கான் அருகே நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து, உயர்நீதி மன்றத்தின் மேற்பார்வையின் கீழ் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஜூலை 31 அன்றும் அதற்குப் பின்னரும் பெருமள வில் வன்முறை வெறியாட்டங் கள் நடைபெற்ற நூஹ் மற்றும் குர்கான் ஆகிய இடங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏ.ஏ.ரகிம் மற்றும் வி.சிவதாசன், ஹரியானா மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் இந்தர்ஜித் சிங் மற்றும் சிலர் அடங்கிய குழுவினர் ஆகஸ்ட் 10 அன்று சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர். நூஹ் பகுதியில் மாநில பாஜக அரசால் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்ட கடைகள், குடி யிருப்புப் பகுதி போலீசார் இருந்தும் கொளுத்தப்பட்ட அஞ்சுமன் மசூதியை பார்வையிட்டனர். மேவாத் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எதிர்க்கட்சியினர் குழு ஒன்று செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு சென்று நிலைமை களை ஆராய்ந்த சிபிஎம் குழு வினர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
வரவிருக்கும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலின்போதும் தேர்தல் ஆதாயங்களைக் குறி வைத்தே, இந்த வன்முறை வெறியாட்டங்கள் மூலமாக, மதவெறித் தீ மிகவும் திட்ட மிட்ட முறையில் விசிறிவிடப் பட்டிருக்கிறது. ஆயுதம் ஏந்திய பசுப் பாது காப்புக் குண்டர்கள் தாங்கள் மேற்கொள்ளும் ஆள்கடத்தல், தடியடிப் பிரயோகங்கள், கொலைகள் முதலானவற்றிற்குத் தங்கள் மீது எவ்விதத் தண்டனை யும் மேற்கொள்ளப்படாது என்ற தைரியத்துடன் இவர்கள் கால்நடை வளர்ப்பவர்கள் மீதும், கால்நடை வர்த்தகர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்களையும், கொலைகளையும் மேற் கொண்டு வந்துள்ளனர். இதற்கு சமீபத்திய எடுத்துக் காட்டு, ராஜஸ்தானின் காக்மிகா கிராமத்தின் அருகாமை யில் இரண்டு மியோ இளை ஞர்கள் கடத்திச் செல்லப் பட்டு, அவர்கள் பிப்ரவரி யில் லோஹாரு என்னுமிடத்தில் உள்ள பிவானி கிராமத்தில் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச்சம்பவ மாகும்.
கொலைகாரனுக்கு ஹரியானா காவல்துறை பாதுகாப்பு
இந்தக் கொடூரமான குற்றத்தின் பின்னணியில் உள்ள பிரதான நபர், மோனு மானேசர் என்பவன். இந்தக் குற்றம் தொடர்பாக இவ னை ராஜஸ்தான் காவல்துறை யினர் கைது செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் என்ற நோக்கத் துடன் ஹரியானா காவல்துறை யினரால் பாதுகாப்பு கொடுக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கிறான். மேவாத் பிராந்தியத்தில் இதற்கு முன்பு எப்போதும் மத நல்லிணக்கச் சூழல் முழுமையாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு முன்பு மதவெறிக் கலவரங்கள் இங்கே நடைபெற்றதில்லை. இத னைக் கருத்தில்கொண்டுதான் பஜ் ரங் தள் மற்றும் விசுவ ஹிந்து பரிசத் பேர்வழிகள், வெளியூர்களி லிருந்து ரவுடிகளை இறக்குமதி செய்து, ஆயுதங்களை வழங்கி, மதவெறி யாத்திரையை நடத்தி இருக்கிறார்கள். இந்த யாத்தி ரை தொடங்குவதற்கு முன், மோனு மானேசர் மற்றும் பலர் விஷத்தைக் கக்கும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் வைரலாக ஒளி பரப்பப்பட்டன. வீடியோக்களில் விசுவ இந்து பரிசத்-பஜ்ரங் தள் ரவுடிகள் பேசி யுள்ள ஆபாசமான பேச்சுக்கள், வன்முறை வெறியாட்டங்கள் ஏற்படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தன. இதில் குர்கான் அஞ்சுமான் மசூதியைச் சேர்ந்த இளம் இமாம் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மசூதியும் ரவுடி களால் சேதப்படுத்தப்பட்டது. இமாம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மியோ இளைஞர்களுக்கு எதிராக பாஜக அரசு
இதனைத்தொடர்ந்து அரசுத் தரப்பில் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்ட ஒரு வார காலத்திலும் அரசே மியோ இளைஞர்களுக்கு எதிராக பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஊர டங்கைப் பயன்படுத்திக் கொண்டும், இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதைப் பயன் படுத்திக் கொண்டும், முஸ்லிம் களின் கடைகள், வீடுகள், புல்டோ சர்களைக் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அங்கே கலவரச் சூழல் எதுவும் இல்லாத நிலையிலேயே அரசு இந்தச் செயலைச் செய்திருக் கிறது. இடிக்கப்பட்ட கடை களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வேத னைகளை சிபிஎம் குழுவினரிடம் தெரிவித்தனர்.. சம்பவ இடத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள அக்கிரம நடவடிக்கைகளைத் தாங்க முடியாது, பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து திங்கள் கிழமையன்று புல்டோசர்கள் கொண்டு கடைகள் இடிக்கப்படுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது. முதலமைச்சரின் உத்தரவின் பேரிலேயே இவ்வாறு கடைகள் இடிக்கப்பட்டன என்று மாஜிஸ்டிரேட்டே ஊடகங்களு க்குச் சொல்லியிருக்கிறார். இதைவிட மோசமான அம் சம் வேறென்ன இருக்க முடியும்? தங்களுக்கு எவ்விதப் பாது காப்பும் இல்லை என்பதை உணர்ந்த புலம்பெயர் தொழி லாளர்கள் பாதுகாப்பு கருதி வன் முறைக்கு உள்ளான இடங்களி லிருந்து வெளியேறிவிட்டார்கள். சம்பவ இடத்திலிருந்த முக்கிய நபர்களை கட்சிக் குழுவினர் சந்தித்த போது, அவர்கள் மத்தி யிலிருந்த அச்ச உணர்வை அறிய முடிந்தது. முஸ்லிம்களுக்குத் தக்க பாடம் கற்பித்துவிட்டோம் என்று இந்து வெறியர்கள் நாடு முழுவதும் செய்தி பரப்பிக் கொண்டிருப்பதாக அவர்கள் கட்சிக்குழுவினரிடம் தெரி வித்தார்கள்.
மதவெறி சூழ்ச்சிக்கு இரையாகாத மக்கள்
ஆட்சியாளர்கள் ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளில் இவ்வாறு ஈடுபட்டபோதிலும் அங்குள்ள மக்கள் இவர்களின் மதவெறி சூழ்ச்சிகளுக்கு இரை யாகாமல் நல்லிணக்கத்துடன் இருந்துவருவதற்கு கட்சிக் குழுவினர் பாராட்டுதல்களைத் தெரிவித்தார்கள். இந்த சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வை யின்கீழ் நீதி விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கட்சிக் குழு கருதுகிறது. சம்பவம் நடந்த பகுதிகளில் மக்கள் இயங்குவதற்கு ஏற்படுத்தப் பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், இயல்பு நிலை யை மீளவும் ஏற்படுத்திட வேண்டும் என்றும் கட்சி கோருகிறது. இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோனு மானேசர் மற்றும் பலர் இதுவரை கைது செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது.. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)