states

img

காட்டுக்குள் கரையை கடந்த “டாணா புயலை” வைத்து பெருமை பேசும் ஒடிசா பாஜக அரசு

வடக்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக (டாணா) வலுப்பெற்றது. இந்த “டாணா  புயல் (கத்தார் நாட்டின் பெயர்)” வெள்ளி யன்று அதிகாலை ஒடிசா மாநிலத்தின் பிடர்கனிகா தேசிய பூங்கா - தாம்ரா துறை முகம் இடையே 120 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது. இந்நிலையில், “தங்களது அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் “டாணா புயல்” உயிர்சேதத்தை விளைவிக்காமல் கரையை கடந்து சென்று விட்டது” என அம்மாநில பாஜக முதல்வர் மோகன் சரண் பெருமையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. “டாணா புயல்” பிடர்கனிகா ஒட்டியுள்ள சரணாலய வனப்பகுதியில் (தேசிய பூங்கா) தான் கரையை கடந்தது. அதாவது மக்கள் குடியிருப்பு அதிகம் இல்லாத காட்டுக்குள் “டாணா புயல்” 120 கிமீ வேகத்தில் மரங்களை பிடுங்கியெறிந்து வடக்கு நோக்கி சென்றது. இதனால் தான் “டாணா புயல்” பெரியளவில் பொருட் மற்றும் உயிர்சேதங்களை ஏற்படுத்தவில்லை. எனினும் ஒடிசாவின் கேந்திரபாரா, பாலசோர், பத்ரக் ஆகிய மாவட்டங்களை பலத்த காற்றுடன் துவம்சம் செய்து விட்டு தான் “டாணா புயல்” வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனை பற்றி ஒடிசா பாஜக அரசு பேசவில்லை.

ஒடிசா, மேற்கு வங்கத்தில் பலத்த மழை

“டாணா புயல்” கரையை கடக்கும் முன்னரே, அதாவது வியாழனன்று காலை முதலே ஒடிசா, மேற்கு வங்க மாநிங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கரையை கடக்கும் பொழுது ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களில் மாவட்டங்களில் அதீதமாக கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் கரையை கடக்கும் மையப்பகுதியில் இல்லை என்றாலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்தது.

“டாணா புயலுக்கு” இடையே 1,600 பெண்களுக்கு பிரசவம்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒடிசா மாநிலத்தில் 4,431 கர்ப்பிணிகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டனர். இதில் சுமார் 1,600 பெண்கள் “டாணா புயல்” கரையை கடந்த நேரத்தில் பிரசவித்துள்ளனர் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.