states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாதர் சங்க சாத்தூர் மாநாடு

சாத்தூர், ஏப்.21- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சாத்தூர் நகர 4-வது மாநாடு  நடைபெற்றது. மாநாட்டிற்கு ஜெயலட்சுமி, ராணி ஆகியோர் தலைமை தாங்கினர். பஞ்ச வர்ணம் வரவேற்றார். மாவட்டச் செய லாளர் எஸ்.தெய்வானை துவக்கவுரை யாற்றினார். சீதாலட்சுமி, மாவட்டத் தலை வர் என்.உமாமகேஸ்வரி, சிஐடியு தலை வர் கே.விஜயகுமார், மாநில செயலாளர் எஸ்.லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரத்தலைவராக எஸ்.சீதாலட்சுமி, செயலாளராக ராணி, பொருளாளராக பாண்டிலட்சுமி ஆகியோர் உட்பட 9 பேர் கொண்ட நகர்க்குழு தேர்வு செய்யப் பட்டது.

பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளர் உட்பட  3 பேர் மீது வழக்கு

சிவகாசி, ஏப்.21- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரி ழந்தார். இதையடுத்து, ஆலையின் உரி மையாளர் உட்பட 3 பேர் மீது காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகாசி மணியம்பட்டி அருகே கணேஷ்வரி பட்டாசு ஆலை உள்ளது.  இங்கு ஏப்ரல் 20-இல் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், மாதாங்கோவில்பட்டி யைச் சேர்ந்த அரவிந்தன் (22) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் (42) என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்  ளார். இதன்பேரில், ஆலை உரிமை யாளரான வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த  தங்கப்பாண்டி, அதே பகுதியைச் சேர்ந்த போர்மேன் ஈஸ்வரன், மேலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் மீது காவல்  துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ராஜேஸ்வரனை கைது செய்தனர்.

எலக்ட்ரிக் கடையில்  தீ விபத்து :  பொருட்கள் நாசம்

மதுரை, ஏப்.21- மதுரை மாயாண்டிபட்டியைச் சேர்ந்த  அமாவாசை மகன் ரகுபதி (38). இவர்  கடச்சனேந்தல் பகுதியில் எலட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் புதனன்று மாலை கடையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே தீய ணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம்  தீயணைப்பு துறையினர்  போராடி தீயை  அணைத்தனர்.  காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ பற்றியதாகவும், சுமார் ரூ. 50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் எரிந்து நாசமானதும் தெரிய வந்தது.

சிவகங்கை: மாற்றுத்திறனானிகள் சிறப்பு குறைதீர் முகாம்

சிவகங்கை, ஏப்.21- சிவகங்கை மாவட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறும் சிறப்பு  குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்டு பயன்பெற லாம் என மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்திலும், ஏப்ரல் 29 அன்று காலை 10 மணிக்கு தேவகோட்டை வரு வாய் கோட்டாட்சியர்  தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது. கூட்டத்தில், அந்தந்த பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்மாயில் மணல்  அள்ளிய இருவர் கைது

தேனி, ஏப்.21- ஆண்டிபட்டி அருகே கண்மாயில் மணல் அள்ளிய ஜேசிபி ஓட்டுநர் மற்றும்  டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், வாகனங்களின் உரி மையாளரை தேடி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு  கண்மாயில் செம்மண் அள்ளுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்ட மனூர் காவல் சார்பு ஆய்வாளர்  யாழிசை செல்வன் காவல்துறையினரு டன் சம்பவ இடத்திற்கு சென்றார்.அப் போது  ஜேசிபி இயந்திரத்தை கொண்டு  மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். ஜேசிபி ஓட்டுநர் க.விலக்கை சேர்ந்த வீரணன், டிப்பர் லாரி ஓட்டுநர் பார்த்த சாரதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஜேசிபி உரிமையாளர் நன்நீதி டிப்பர் லாரி உரிமையாளர் சுந்தர மூர்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.

ஏப்.28 முதல் மே 9 வரை கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிட நேர்காணல்

விருதுநகர் ஆட்சியர் தகவல்

விருதுநகர், ஏப்.21- கால்நடை பராமரிப்புத்துறை யில் ‘ஒமைக்ரான் தொற்று’ கார ணமாய் ஒத்திவைக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு உதவி யாளர் பதவி பணிக்கான நேர் காணல் ஏப்ரல் 28 முதல் மே 9 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடை பெறவுள்ளது என மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி தெரி வித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தகுதியுள்ள விண்ணப்ப தாரர்களுக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான புதிய நேர்முக அழைப்பாணை அஞ்ச லில் அனுப்பப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்  பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் ஒதுக்கப் பட்ட நேரத்தில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நேர்முக அழைப்  பாணை அனுப்பி வைக்கப்பட்ட தகுதியான நபர்களின் பட்டி யல் விருதுநகர் மாவட்ட வலைத் தளமான https://virudhu nagar.nic.in/ ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அழைப்  பாணை கிடைக்கப் பெறாத வர்கள்  வரும் ஏப்ரல் 25, 26 தேதி களில் மாவட்ட கால்நடை பரா மரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தினை தகுந்த ஆதாரங்களுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். புதிய நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் அனு மதிக்கப்பட மாட்டார்கள் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில்  இந்து முன்னணியின் விஷம எதிர்ப்பால்  கைவிளக்கு ஏந்திய காரிகைக்கு சிலை அமைக்க தடை

சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம்

தேனி, ஏப்.21- செவிலியர்களின் முன்னோடி யாக விளங்குபவரும், கை விளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள செவிலியர் குடியிருப்பில் சிலை  வைக்க இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொட ர்ந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சிலை வைக்க தடை விதித்தது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. நைட்டிங்கேல் சுகாதார நடை முறைகளை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனையில் இறப்பு விகி தம் கணிசமாகக் குறைந்தது.  இவ ருடைய சேவையை பாராட்டி 1883-ம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்க விருது வழங்கப்பட்டது.  அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மை கொண்டு விளங்கி னார். அவருக்கு தேனி அரசு மருத்து வக்கல்லூரி வளாகத்தில் உள்ள செவிலியர் குடியிருப்பில் சிலை வைப்பதற்கு செவிலியர்கள் முன்  வந்து புதனன்று பூமி பூஜை போட்டனர். இதுகுறித்து சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. இதை விரும்பாத இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பிளா ரன்ஸ் நைட்டிங்கேல் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அது போல முத்து லட்சுமி சிலை  வைக்க மருத்துவமனை வளா கத்தில் பூமி பூஜை போட போவ தாக அறிவித்தனர். இதற்கிடையே நைட்டிங் கேல் அம்மையார் சிலை நிறுவு வதற்கான பணிகளை மேற்  கொள்ள தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தடை விதித்தார். இதனைத்தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் அனுமதி யின்றி மருத்துவமனை வளாகத் தில் சிலை அமைக்க பூமி பூஜை நடத்தப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்  னணி அமைப்பினர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி க.விலக்கு போலீசி லும் புகார் கொடுத்தனர்.  இந்நிலையில் அனுமதி யின்றி சிலை வைக்க பூமி பூஜை  நடத்தப்பட்ட விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் என்று மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன்  கூறியுள்ளார்.   தலைசிறந்த செவிலியருக்கு சிலை வைப்பதற்கு மத சாயம் பூசி தடை விதிக்கப்பட்ட செய லுக்கு சமூக செயல்பாட்டாளர் கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா முகத்துவாரத்தில்  மீன்பிடிக்க தடை விதித்திடுக! பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இராமேஸ்வரம், ஏப்.21-  பாம்பன் முதல் வாலிநோக்கம் கடற் கரை வரையிலான ஆற்று முகத்துவாரத்தில் உற்பத்தியாகும் பால் மீன் குஞ்சுகளை பிடிக்க மீன்வளத்துறையினர் தடை விதிக்க  வேண்டும் என தேசிய பாரம் பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சே. சின்னத்தம்பி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில் 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்  நிலையில், மன்னார் வளைகுடா பாம்பன் குந்துகால் முதல் வாலிநோக்கம் பகுதி யில் உள்ள கடற்கரை ஓரங்கள், மழைநீர் முகத்துவாரங்கள் மற்றும் ஆற்று முகத் துவாரங்களில் பால் மீன் குஞ்சுகள் காணப்படும். இந்த மீன்கள் வளர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் போது பெரிய மீன்களுக்கு உண வாக இருக்கும். ஆனால், குஞ்சுகள் உற்பத்தியாகும் இடங்களில் மீன்களை பிடித்து செல்வதால் தடைகாலத்தின் முழு நோக்கம் வீணாகி விடுகிறது.  இதனை தடுக்கவும் மன்னார் வளை குடா கடற் கரையோரம் பகுதியில் உற்பத்தி யாகும் மீன் குஞ்சுகளை பிடிப்பதை மீன்  வளத்துறையினர் தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் கைது

தேனி, ஏப்.21- இளம் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற தேனியில் இயங்கி வரும் கணபதி சில்க்ஸ் உரிமை யாளர் முருகனை மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். பெரியகுளம் அருகே டி.காமக்காபட்டியை சேர்ந்த சின்னகருப்பன் மகள் மேனகா (29). இவர் எம்.ஏ. ஆங்கிலம் படித்துள்ளார். இவர் தேனி அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘‘நான் தேனியில் உள்ள கணபதி சில்க்ஸ் கட்டிடத்தில், அழகுசாதனப் பொருட்கள் விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறேன்.  இந்நிலையில், கணபதி சில்க்ஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் மாரியப்பனின் மகன் முருகன் என்னு டன் நட்பாக பழகினார். பின்னர் அவர் என்னை காத லிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி நெருங்கி பழகினார். கடந்த 8-ந்தேதி அவரு டைய ஜவுளிக்கடையின் மேலாளரான பழனிசெட்டி பட்டியை சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டுக்கு என்னை முருகன் அழைத்துச் சென்றார். அங்கு எனது கழுத்தில் தாலியை கட்டிவிட்டு சென்றார்.  பின்னர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அமெரிக்கா வில் குடியேறப் போவதாகவும், என்னை திருமணம் செய்தது நாடகம் என்றும் கூறி மிரட்டியதாகவும், பின்னர் சின்னமனூரை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்ததாகவும்  இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி யிருந்தார்.  இந்த புகாரின் பேரில், முருகன் மீது தேனி  அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றியதாக அனைத்து மகளிர் காவல்துறையினர் வியாழனன்று கணபதி சில்க்ஸ் உரிமையாளர் முருகனை கைது செய்தனர்.

பொய் வழக்கிலிருந்து வாலிபர் சங்க நிர்வாகிகள் விடுவிப்பு

திண்டுக்கல், ஏப்.21- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  நிர்வாகிகள் சரத்குமார், விஷ்ணுவர்த் தன் ஆகியோர் மீது காவல்துறை அதி காரிகள் போட்ட பொய்வழக்கை நீதிபதி  தள்ளுபடி செய்து, அவர்களை விடுதலை செய்தார்.  2017ம் ஆண்டு திண்டுக்கல் தெற்கு காவல்நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளரை வெட்டிக் கொன்று விடுவோம் என்று மிரட்டியதாகவும், தாக்க வந்ததாகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.சரத்குமார், ஆர்.விஷ்ணுவர்த்தன் ஆகி யோர் மீது பொய் வழக்கு போடப்பட்டது.  இந்த வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாலிபர் சங்கத்தின் சார்பாக வழக்கறி ஞர்கள் டி.நாகேந்திரன், கென்னடி, ரவி,  பரத் ஆகியோர் வழக்கு நடத்தி வந்தனர்.  5 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் புதனன்று நீதிபதி, வாலிபர் சங்கத் தலைவர்கள் சரத்குமார், விஷ்ணு வர்த்தன் ஆகியோர் மீது போடப்பட்ட பொய்வழக்கை தள்ளுபடி செய்து இரு வரையும் நிரபராதிகள் என விடுதலை செய்தார்.

இலங்கையிலிருந்து மேலும் 3 பேர்  தப்பி வந்தனர்

இராமேஸ்வரம், ஏப்.21-  இலங்கையில் கடுமையாக பொரு ளாதார நெருக்கடி காரணமாக இதுவரை  39 பேர் வந்துள்ள நிலையில் மீண்டும்  மூன்று பேர் படகு மூலம் தனுஷ்கோடிக்கு புதனன்று தப்பி வந்தனர்.  இலங்கையில் இருந்து தனுஷ் கோடிக்கு 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அனைவருக்கும் தனித்தனி வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டு மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகா மில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை மட்டக் களப்பு திமிலை தீவு பகுதியை சேர்ந்த விஜயசாந்தி (என்ற) வர்ஷினி (37),  நைனிகா (11), ரங்கிசன் (3) ஆகிய மூன்று  பேர் இலங்கை பணம் ரூ.2 லட்சம் கொடுத்து தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு படகு மூலம் புதனன்று வந்தனர்.  இவர்களை மீட்ட காவல்துறையினர் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் தனித்துறை ஆட்சியர் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர்.

செம்பொன்நெருஞ்சியில் ஜல்லிக்கட்டு

திருச்சுழி, ஏப்.21- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது செம்பொன்நெருஞ்சி கிராமம். இங்குள்ள அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்  திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்  கட்டு நடைபெற்றது.  போட்டியில் கலந்து கொள்ள இணையதளம் மூலம் 1400 மாடுகள் முன்பதிவு செய்யப்பட்டது. இதில், 300 மாடுகள் களம் இறக்கப்பட்டன. 200-க்கும்  மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். போட்டியை அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாண் குமார் தொடங்கி வைத்தார். ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என காலை 8 மணி முதல் மாலை 1 மணி வரை வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட கண்காணிப்பாளர் மனோகர் நேரில்  பார்வையிட்டார். திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் மதியழகன், அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் தலை மையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவில் திருவிழாவில் பெண்ணிடம்  நகை திருட்டு

காரியாபட்டி, ஏப்.21- காரியாபட்டி அருகே சாமி கும்பிட வந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அருகே உள்ள மேல  உப்பிலிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் அழகு நாச்சியார் (35). இவர் தனது ஊரை சேர்ந்தவர்களுடன் காரியாபட்டி கே.செவல்பட்டி அருகே உள்ள கபால காளி கோவில் கும்பாபிஷேகத்திற்கு சாமி கும்பிட வந்துள்ளார். சாமி கும்  பிட்டுவிட்டு வேனில் வீட்டிற்குச் சென் றுள்ளனர்.  அப்போது, தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயின் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அழகுநாச்சியார் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள்  வேலை வழங்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை, ஏப்.21- அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது பாலையம்பட்டி மற்றும் மலைப்பட்டி ஊராட்சி. இங்குள்ள மாற் றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அட்டை வழங்காத நிலை இருந்து வந்தது.  இதையடுத்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஊரக வேலை அட்டை வழங்க  வேண்டுமென அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், அரசாணை நிலை எண் 52-ஐ  அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திற னாளிக்கு 4 மணி நேரம் வேலை செய்தால் முழு ஊதியம், 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மட்டும் வேலை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில், மாவட்டத் தலைவர் அ.கும ரேசன், மாவட்டச் செயலாளர் கே.நாக ராஜ், மாவட்டத் துணை நிர்வாகி நட ராஜன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கணே சன், நகர் குழு உறுப்பினர் காமாட்சி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.