சுப்பிரமணியசாமி விமர்சனம்
புதுதில்லி, ஏப்.19- “பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் பிரதமர் நரேந்திர மோடி தோற்றுப் போய் விட்டார்” என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சுப்பிரமணியசாமி, “கடந்த 8 ஆண்டுகளில் பிரதமராக, பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் நரேந்திர மோடி தோற்றுப் போய் விட்டார். மறு பக்கம் 2016-ஆம் ஆண்டிலிருந்தே வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. தேசிய பாதுகாப்பு மிகப் பெரிய அளவில் பலவீனமடைந்துள்ளது. சீனா குறித்து மோடிக்கு எந்த தெளி வும் இல்லை. மீண்டுவர வழிகள் உள்ளன. ஆனால் மோடிக்கு அது தெரியுமா?” என்று கேட்டுள்ளார். சுப்பிரமணியசாமியின் இந்த டுவீட்டுக்கு ரிச்மேன் சுரேஷ் என்பவர் அளித்த பதிலில், “உங்களது கூற்றி லிருந்து நான் மாறு படுகிறேன். பிரதமர் பதவியில் மோடி அல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாக போயிருக் கும். பாகிஸ்தானியர்கள் போலவோ அல்லது இலங்கைக்காரர்கள் போலவோ கத்திக் கொண்டிருந்தி ருப்போம். பிரதமர் மோடியின் முக்கி யத்துவம், வேறு பிரதமர் யாரேனும் வந்தால்தான் தெரியும்” என்று கூறி யிருந்தார். இந்நிலையில், அதற்கும் சுப்பிரமணியசாமி பதிலடி கொடுத் துள்ளார். “இப்படித்தான் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுப் போகும் போதும், ‘இங்கிலாந்து வெளியேறி விட்டால் இந்திய வீழ்ச்சி அடைந்து விடும்’ என சொன்னார்கள்..” என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.