ஜெய்ப்பூர், பிப். 25 - ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட், 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, அம்மாநில சட்டப்பே ரவையில் புதனன்று தாக்கல் செய்தார். 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர உரிமை உண்டு என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் அவர் வெளியிட்டார். இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் பாஜக தலைவரும், எம்எல்ஏ-வுமான சதீஷ் பூனியா, “திருமணத்துக்காக ஒப்பனை செய்து தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள முயலும் கறுப்பு நிற மணப்பெண்ணைப் போல ராஜஸ் தான் காங்கிரஸ் அரசின் பட்ஜெட் உள்ளது” என்று விமர்சித்தார்.
இது சட்டப்பேரவையில் கடும் அம ளியை ஏற்படுத்தியது. ‘கறுப்பாக இருக்கும் பெண்கள் தாழ்ந்தவா்கள் என்ற கருத்தில், பெண்களை அவ மதிக்கும் வகையில் பூனியா பேசி யிருப்பதாகவும், அவர் சட்டப் பேர வையில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றும் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ-க்கள் முழக்கங் களை எழுப்பினர். இதனால், சட்டப்பேரவையே ஒத்திவைக்கப் பட்டது. சட்டப்பேரவைக்கு வெளி யேயும் பூனியாவுக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, கறுப்பான பெண் என்ற தனது விமர்சனத்திற்கு சதீஷ் பூனியா தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “பட்ஜெட்டுக்கு நான் எதிர் வினையாற்றினேன். அந்த நேரத்தில் நான் தான்தோன்றித்தனமாக சில வார்த்தைகள் பேசினேன். பொதுவாக நான் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. எனது வார்த்தைகள் யாருடைய மனதை யாவது புண்படுத்தியிருந்தால் அதற் காக தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.