நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் தொடந்து 7-ஆவது நாளாக காற்றின் தரம் மிக மோச மான அளவில் குறைந் துள்ளது. தற்போ தைய நிலையில் காற்றின் தரம் 500 புள்ளிகளை நெருங்கி வருவ தால் தில்லியில் பள்ளிகளுக்கு விடு முறை, வாகனப் போக்குவரத்துக்கு தடை உள்ளிட்ட பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள் ளன. இந்நிலையில், தில்லியின் காற்று மாசு சூழலுக்கு ஹரியானா மாநிலமே காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக் கர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில்,”தில்லியின் காற்று மாசுப் பிரச்சனைக்கு பஞ்சாப், ஹரியானா மாநி லங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவு கள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. பஞ்சாப் தேசியத் தலைநகரில் இருந்து 500 கி.மீ., உள்ளது. ஆனால் ஹரியானா மாநிலம் தில்லியில் இருந்து 100 கி.மீ. தொலைவில் மிக அருகில் உள்ளது. இத னால் ஹரியானாவே தில்லி காற்று மாசு அதிகரிக்கக் காரணம். இதனால் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஹரியானா வின் மனோகர் லால் கட்டார் அரசு எடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். பிரியங்கா காக்கரின் இந்த கருத்தால் தில்லி - ஹரியானா அரசு களுக்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்றம் காட்டம் தில்லி காற்று மாசுபாடு தொடர்பாக நிபுணர் குழு அமைக்க உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு திங்க ளன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் விசா ரணைக்கு வந்தது. வாதங்கள் முடிவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “காற்று மாசு கட்டுப்பாடு தொடர்பான நட வடிக்கை என்பது முழுக்க முழுக்க அர சின் கொள்கை முடிவு சார்ந்தது. அப்படி யிருக்க உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் தோறும் காற்று மாசு பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழு அமைத்து உத்தரவிட்டால் மட்டும் காற்று மாசுபாடு கட்டுப்பட்டுவிடுமா?” என காட்ட மாக கேள்வி எழுப்ப, பொதுநல வழக்கு தொடர்ந்த மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து மனு தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.