புதுதில்லி, ஜன.24- ஜனவரி 26 அன்று தில்லியில் நடை பெற உள்ள குடியரசு தின கொண் டாட்டத்தில் அருணாச்சல பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், கோவா, குஜ ராத், ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா, மகா ராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், உத்த ரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 12 மாநிலங்களின் அலங்கார ஊர்தி களுக்கு மட்டுமே ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்தி களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வீரஞ்செறிந்த யுத்தம் நடத்தி தங்களின் இன்னுயிரை ஈந்த வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், கப்ப லோட்டிய தமிழன் என்ற பெருமைக்கு ரிய வ.உ. சிதம்பரனார், மகாகவி பாரதி ஆகியோரின் தியாகங்களை எடுத் துக்காட்டும் உள்ளடக்கங்கள் தமிழ் நாட்டு அரசின் ஊர்தியில் இடம்பெற்றி ருந்தன.
இதேபோல கேரளத்தின் ஊர்தி யில் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி யான நாராயண குரு, மேற்குவங்க ஊர்தியில் மகாகவி ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் வடிவங்கள் இடம்பெற் றிருந்தன. ஆனால், கொரோனா சூழலில், குறைந்த இடம் மற்றும் நேரம் கார ணமாக குறிப்பிட்ட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் மற்றும் ஒன்றிய அரசின் 9 அமைச்சகங்கள் அல்லது துறைகளின் ஊர்திகள் மட்டுமே பங் கேற்க முடியும் என்று கூறி தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க ஊர்திகளுக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுத்து விட்டது. மேலும், இந்தாண்டு 75 ஆண்டு கால சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில், ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ (சுதந்திர அமுதம்) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அலங்கார ஊர்திகளை வடிவமைக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பு துறைக்கான மக்கள் தொடர்பு அதிகாரி நம்பிபூ மரின்மாய் தெரிவித்தார். இந்நிலையில்தான், அணிவகுப் புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 12 மாநி லங்களின் ஊர்திகளில் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ (சுதந்திர அமு தம்) என்று அவர்களே முன்வைத்த மையக்கருத்துக்கு மாறாக, கோயில் களும், இந்துக் கடவுள் சிலைகளும், மாட்டுச் சாணம் தொடர்பான திட்ட விளக்கங்களும் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநி லத்தின் அலங்கார ஊர்தியில் அம் மாநில பள்ளத்தாக்குகளில் விளையும் அழகான மலர்களின் தோற்றத்துடன், பத்ரிநாத் கோவில் வடிவம் இடம்பெற் றுள்ளது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான கர்நாடகத்தின் அலங்கார ஊர்தியில் சுதந்திர போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாயா உரு வத்துடன் அனுமன் சிலையும் மற்றும் டெரகோட்டா சிலைகளும் வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக் கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் காசி விசுவ நாதர் கோவிலின் உருவம் பிரதா னப்படுத்தப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர் மாநில அலங்கார ஊர்தியில், மாட்டுச் சாணத்தை கிலோ இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்து, அதன்மூலம் இயற்கை முறையிலான உரம் தயாரிக்கும் திட்டம் இடம்பெற் றுள்ளது. இவைதவிர, ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி, விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு, துறவுவாழ்க்கைக்குப் போன ஸ்ரீஅரவிந்தரின் 150 வரு டங்களை குறிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.