states

img

உலகம், வளரும் நாடுகளிடம் வீழ்ந்து வருகிறது

ஹவானா, செப்.16-  வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை வீழ்த்த முயற்சித்தன. ஆனால் அவை வளரும் நாடுகளிடம் வீழ்ந்து வருகின்றன என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோ னியோ குட்டரெஸ் கூறினார். செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில்  கியூபா தலைநகர் ஹவானாவில் ‘ஜி-77 பிளஸ் சீனா’ குழுவின் உச்சி மாநாடு நடைபெற்றது. உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். கடந்த மாதம் நடைபெற்ற  வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பிரிக்ஸ் கூட்ட மைப்பில் ஆறு புதிய உறுப்பினர்கள் இணைக் கப்பட்டுள்ளனர் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் நிறைந்த பொருளாதார கூட்டமைப் பான ஜி-20 இல் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது .இந்த உலகளாவிய மாற்றங்களை தொடர்ந்து இந்த மாநாடு தெற்குலக நாடுகளின் குரலை வலுப்படுத்து வதில் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 1964 இல் உருவாக்கப்பட்ட இந்த குழு பல ஆண்டுகளாக உறுப்பினர்களின் எண் ணிக்கையை அதிகரித்து, 134 வளரும் நாடு களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இவை ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களையும், உலக மக்கள்தொகையில் 80 சதவீதத்தையும் பிரதி நிதித்துவப் படுத்துகின்றன. இக்கூட்டமைப்பி ற்கு சுழற்சி முறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்கிறது. நியூ யார்க்கில் நடந்த ஜி-77 அமைப்பின் மாநாட்டில் இந்தியா தலைமை ஏற்றிருந்தது. சீனா குழுவில் உறுப்பினராக இல்லை. எனினும் அமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் அரசியல் ரீதியாக ஒத்துப் போகிறது. எனவே அமைப்பின்  அதிகாரப்பூர்வ அறிக்கை களிலும் பெரும்பாலும் ‘ஜி-77 பிளஸ் சீனா’ என்றே குறிப்பிடப்படுகிறது.

ஜி 77 பிளஸ்  சீனா உச்சி மாநாடு, கியூபா ஜனாதி பதி மிகுவல் தியாஸ் கேனல் பெர்முடெஸ் தலைமையில் ஹவானாவில் துவங்கியது.மாநாட்டின் முதல் நாளில் கியூபா புரட்சியின் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ கலந்து கொண்டார்.உச்சி மாநாட்டின் இந்தாண்டு தலைவரான கியூபா ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலா ளர் அன்டோனியோ குட்டரெஸ் உரையாற்றி னார். நீண்டகாலமாக அனைவரையும் உள்ள டக்கி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் உங்கள் குழு, உங்கள் சக்தியை பயன்படுத்தி போராடி முன்னேறும் என நம்புகிறேன். சில ஆண்டு களாக வளரும்  நாடுகள் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டிருந்தா லும்,தற்போது வறுமை  மற்றும் விலைவாசி உயர்வு, கடன் மற்றும் அதிகரித்து வரும் கால நிலைப் பேரழிவுகள் போன்ற எண்ணற்ற நெருக்கடிகளை இந்நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன என குட்டரெஸ் குறிப்பிட்டார்.உலகளாவிய அமைப்புகளின் கட்டமைப்பு கள் வளரும் நாடுகளை முடக்கி வீழ்த்த முயற் சித்தன. ஆனால் முடிவில் உலகம் வளரும் நாடுகளிடம் வீழ்ந்து வருகிறது என்றார். மாநாடு பிரதிநிதிகள் அமைப்பின் நோக்கங்கள், புதிய சர்வதேசப் பொருளாதார ஒழுங்கு முறை, உலக நிதிக் கட்டமைப்பில்  சீர்திருத்தம், ஏகாதிபத்திய நாடுகளின் ஒரு தலைப்பட்ச  நடவடிக்கைகளை நிராகரித்தல் குறித்தான முக்கிய விவாதங்களை முன்னெ டுத்தனர். 

முதலாளித்துவ நாடுகளின் ஒருதலைப் பட்சமும் மேலாதிக்கமும் தலை விரித்தாடு கின்றது. அவை வளரும் நாடுகள் மீது பொரு ளாதாரத் தடைகளை விதித்து பொருளாதார முடக்கத்தை உருவாக்குகின்றன. இந்தச் செயல்கள் வளரும் நாடுகளின் நியாயமான வளர்ச்சி, உரிமைகள் மற்றும் நலன்களை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்நிலை யில் கடந்த நூறாண்டுகள் காணாத அளவில் உலக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன குறிப்பாக வளரும் நாடுகள் வலுப்பெற்று வருகின்றன, மேலும் வளரும் நாடுகளின் கூட்டு எழுச்சியும் தொடர்ந்து உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைப்பதிலும் அதிகரித்து வரும் தெற்கு லக நாடுகளின் ஒத்துழைப்பு  முக்கியப் பங்கு வகிக்கிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி இந்தியாவில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கார ணம் காட்டி இந்த மாநாட்டில், இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் செல்ல இருந்த பிரதிநிதிகள் குழு வெளியுறவு அமைச்சக செயலாளர் சஞ்சய் வர்மா தலைமையில் பங்கேற்றுள் ளது.