states

img

விவசாயிகளுடன் மோதலாம் என தப்புக்கணக்கு போட வேண்டாம்!

ஷில்லாங், மார்ச் 12 - “ஒன்றிய பாஜக அரசு, விவசாயிகளுடன் மோத நினைக்கக் கூடாது; அது அவர்களுக்கு ஆபத்தாக முடியும்” என்று மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் எச்சரித்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது: “ஒன்றிய அரசுக்கு எனது அறிவுரை என்னவென்றால், விவசாயிகளுடன் மோதாதீர்கள், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு தேவையானது பேச்சுவார்த்தை மூலம் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் அதை போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வார்கள். போராட்டம் மூலம் பெற முடியவில்லை என்றால் அவர்கள் வன்முறை மூலம் பெற்றுக்கொள்வார்கள். விவசாயிகளைத் தடுக்க முடியாது. கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என விவசாயிகளுக்கு தெரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.  இவ்வாறு சத்யபால் மாலிக் பேசியுள்ளார்.