states

img

ஆளுநர் மாளிகைகளை பாஜக தலைமையகமாக்குகிறது

தலசேரி, நவ.11- அரசுக்கு எதிரான கேரள ஆளுநரின் நடவடிக்கை தனித்த நடவடிக்கை அல்ல என்றும், தமிழகம், தெலுங்கானாவிலும் இதே நிலைதான் உள்ளது என்றும் நீதிபதி கே.சந்துரு கூறி னார். ஒன்றிய உள்துறையின் ஏஜெண்டுகளாகவும், பா.ஜ.,வின் பிரச்சாரகர்களாகவும் ஆளுநர் கள் செயல்படுகின்றனர். கே.இ.கங்காதரன் நினைவு விருதினை பெற்றுக் கொண்டு அவர் மேலும் கூறுகையில், தேர்ந் தெடுக்கப்பட்ட அரசில் அமைச்ச ரை பதவி நீக்கம் செய்ய ஆளு நருக்கு அதிகாரம் இல்லை. ஷேர்சிங் வழக்கில் உச் நீதிமன்றத் தின் 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பைப்  படித்தால், இதை நீங்கள் உறுதிப் படுத்தலாம். பேரறிவாளன் வழக்கில் ஆளுநரின் அதிகார வரம்பு தொடர்பாக உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும் உள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களை காலவரை யின்றி நிறுத்தி வைக்க முடியாது. சட்டமன்றத்தால் அங்கீகரிக் கப்பட்ட பல்கலைக்கழக சட்டத்தின்படி ஆளுநர் வேந்தராக முடியும். ஆனால், துணைவேந் தர்களை விருப்பப்படி நியமிக்க வோ, நீக்கவோ முடியாது. பத்தி ரிகையாளர்களை வெளியேறச் சொல்ல அரசியலமைப்புச் சட்டத் தின்படி நியமிக்கப்பட்ட நபர் தரம் தாழ்ந்துவிடக் கூடாது. தன்னை யாரோ கொல்ல முயற்சிப்பதாக கனவு காணும் ஆளுநருக்கு ஆலோசனை (கவுன்சிலிங்) தேவை. இ.எம்.எஸ்., ஆட்சியை கலைத்தது போல், இனிமேல் அர சுகளை கலைக்க முடியாது எனவும் நீதிபதி கே.சந்துரு கூறினார்.