states

img

ஒடிசா அரசு இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கோரிக்கை 

ஒடிசாவில் சுகாதார பாதுகாப்பது தேவைகளை கருத்தில் கொண்டு, சுந்தர்கர் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றை நிறுவ வேண்டும் என மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. 

பீகாரில் இரண்டாவது எய்ம்ஸ் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற திட்டம் மற்றொரு மாநிலத்தில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அறிந்த ஒடிசா அரசு,  ஒடிசாவின் சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் மேற்கு ஒடிசாவிற்கு இரண்டாவது எய்ம்ஸ் பரிசீலிக்கப்படலாம் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

சுந்தர்கரில் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு உள்ளது. ஒரு சமூக பொறுப்புணர்வு முயற்சியாக, ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை நிறுவ ஒடிசா அரசு மற்றும் என்டிபிசி இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. திட்டத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன மற்றும் உபகரணங்கள் வாங்கு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது.  புதிய எய்ம்ஸ் மேற்கு ஒடிசாவின் பழங்குடி மக்களுக்கும், பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் உதவும் என்று மாநில தலைமைச் செயலாளர் கூறியுள்ளார். 

கிடைக்கக்கூடிய இந்த உள்கட்டமைப்பை குறுகிய காலத்திற்குள் எய்ம்ஸ் அமைப்பதற்குப் பயன்படுத்தலாம். இது இப்பகுதியில் உள்ள ஒரு பழங்குடியின மக்களின் மருத்துவ சுகாதாரத்தை பூர்த்தி செய்யும் மேலும், மேற்கு ஒடிசாவின் பின்தங்கிய பகுதியில் தரமான பராமரிப்பை வழங்க உதவும். இருப்பிடம் எளிதில் சாலை, ரயில் மற்றும் விமானம் வழியாக அணுகலாம் என தெரிவித்துள்ளனர்.
 

;