திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவி லுக்குச் சொந்தமாக, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்க, வைர, வைடூரிய நகைகள் உள்ளன. எனினும், அவை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கோவில் ஊழியர்களுக்கு ஊதியம்கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து, ஊழியர்களின் நிலையை கருத்தில்கொண்டு, பத்மநாப சுவாமி கோயிலுக்கு கேரள அரசு ரூ. 2 கோடி வட்டியில்லாத கடன் வழங்க முடிவு செய்துள்ளது.