states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வழக்கம்போல டுவிட்டரில் டிரெண்டான ‘கோ பேக் மோடி’

“பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக வியாழனன்று (மே 26) சென்னை வருகிறார். மதுரை - தேனி இடையேயான அகல ரயில் பாதை உள்ளிட்ட ரூ. 31 ஆயிரத்து 400 கோடி  மதிப்பிலான 11 திட்டங்களை அவர் துவக்கி வைக்கிறார். வழக்கமாக மோடி தமிழகம் வரும் பெதெல்லாம் ‘மோடியே திரும்பிப் போ!’, ‘கோ பேக் மோடி’ (#Go Back Modi) என்ற முழக்கம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகும். இந்தமுறை திமுக ஆளும்கட்சியாகி விட்டதால், கூட்டணி கட்சிகளிடம் எதிர்ப்பு அதிகம் இருக்காது என்று பாஜக-வினர் கணக்குப் போட்ட னர். ஆனால், ஒருநாள் முன்னதாகவே ‘கோ பேக் மோடி’ (#Go Back Modi) டுவிட்டரில் டிரெண்ட் ஆக துவங்கியிருக்கிறது.

மூன்றாவது நாளாக அடிவாங்கிய பங்குச் சந்தைகள்!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வர்த்தக வாரத்தின் முதல் நாளான திங்களன்று 38 புள்ளிகள் சரிந்தது. 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 236 புள்ளி களை இழந்திருந்தது. இந்நிலையில், புதனன்று 2-ஆவது நாளாகவும் இந்தியப் பங்குச் சந்தை கள் சரிவைச் சந்தித்துள்ளன. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 303 புள்ளிகும், தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிப்டி 99 புள்ளி களும் சரிவைச் சந்தித்துள்ளன.

கும்பல் வன்முறையாளர்கள் கொண்டாடப்படுகின்றனர்!

“பாகிஸ்தானில் ஒரு நபர் கும்பல் தாக்குதலால் அடித்துக கொல்லப்பட்டார். இந்த கும்பல் தாக்குதல் தொடர்பாக 6 பேருக்கு தூக்குத் தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை யும் விதித்தது, அந்நாட்டு நீதித்துறை. 2015-ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் பல ‘அக்லக்’குகள் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் கும்பல் தாக்குதல் நடத்து பவர்கள் மாலை அணிவித்து கொண்டாடப்படுகின்றனரே தவிர தண்டிக்கப்படுவதில்லை. இதுதான்  பாகிஸ்தான் நீதித்துறைக்கும், இந்த (இந்திய) நீதித்துறைக்கும் உள்ள வித்தியாசம்” என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் செயற்பாட்டுக் குழுவில் சுனில்!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள செயற்பாட்டு குழுவில் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் , அஜய் மக்கான், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில்  கனுகோலுவுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் முன்னாள் கூட்டாளியான இவரும் மிகச்சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளர் ஆவார். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட  கட்சிகளுக்கு வியூகங்களை அமைத்துக் கொடுத்த அனுபவம் பெற்றவர். தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்.

காந்தியின் கொள்கைகளையே பின்பற்றி வருகிறேன்!

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு முகமை கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்தது. இந்த  வழக்கில் அவர் குற்றவாளிதான் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்ப ளித்தது. இதனிடையே, தண்டனை அறிவிப்புக்கு முன்னதாக நீதிமன்றத்தில் பேசிய யாசின் மாலிக், “ஆயுதங்களை கைவிட்ட பின்னர், நான் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறேன். அப்போது முதல் காஷ்மீரில் வன்முறையற்ற அரசியலையே நடத்திக் கொண்டி ருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி ‘முதல்வர்’ வேட்பாளர் பாஜகவில் ஐக்கியம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற கர்னல் அஜய் கொத்தியால் ஆவார். இவர், தற்போது உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

பொதுத்துறை பிஓஐ வங்கி லாபம் 2 மடங்கு அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பாங்க் ஆப் இந்தியா’ (BOI)வங்கியின் நிகர லாபம், கடந்த மார்ச்சுடன் நிறைவடைந்த 4-ஆவது காலாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், பிஓஐ வங்கி ரூ. 250 கோடி நிகர லாபம் ஈட்டியி ருந்தது. இது 2021-22-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ. 606 கோடியாக அதிகரித்துள்ளது.