திருமணம் செய்து கொள்வதாக காதலிக்கு கொடுத்த வாக்கை பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று கூறி கைவிடுவதை பாலியல் குற்றமாக கருத முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. காதலிக்க பெற்றோர் வேண்டாம்; கழற்றி விட மட்டும் பெற்றோர் வேண்டுமா? மும்பை உயர்நீதிமன்றம் சொல்வது சரியல்ல. திருமண வாக்குறுதியால் தான் தாம்பத்ய உறவுக்கு பெண் சம்மதிக்கிறார். வாக்குறுதி மீறப்பட்டால் சம்மதமே பொருள் இழக்கிறது. எனவே அது பாலியல் வல்லுறவுதான்.