புதுதில்லி, டிச.7- முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வியாழனன்று ஒருநாள் போராட்டத்தை ரத்து செய்த னர். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த மழைக் கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்க ளவையின் குளிர்கால கூட்டத்தொடரிலி ருந்து இடைநீக்கம் செய்வதாக நவ.29-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அவைத் தலைவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடை நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், சிவ சேனை, திரிணாமுல், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், இடைநீக்கம் செய்யப் பட்ட உறுப்பினர்கள் வியாழனன்று போராட்டத்தை ரத்து செய்தனர். முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வியாழனன்று ஒருநாள் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அவையில் தாங்கள் பங்கேற்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.