states

img

பாஜக எதிர்ப்பு இயக்கம் வலுவடைகிறது நம்பிக்கையை அளித்தது கம்மம் பேரணி

புதுதில்லி, ஜன.20- கம்மம் பேரணியின் எதிரொலியாக தேசிய அரசியலை மதச்சார்பற்ற சக்தி களுக்கு ஆதரவாக மாற்றும் இயக்கம் வலுப்பெற்றுள்ளது. தெலுங்கானாவின் கம்மம் நகரில் பாரத் ராஷ்டிர சமிதி சார்பில் புதனன்று நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணி யில் எதிர்க்கட்சிகள் திரண்டன. பாஜக வுக்கு எதிரான ஒரு தீர்மானகர முன்னே ற்றமாக மாறியது கம்மம் பேரணி. பாஜகவை திறம்பட எதிர்கொள்ளக் கூடிய முன்னணிகள் ஒவ்வொரு மாநி லத்திலும் வலுவடைந்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக முன்னணிக்கு எதிராக அகில இந்திய அளவில் மாற்று முன்னணி உரு வாக்கப்படாவிட்டாலும், அதிகபட்ச மாக பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பெற ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கள் உருவாகி வருகின்றன. பீகாரில், தேசிய ஜனநாயகக் கூட்ட ணியில் இருந்து விலகி, மதச்சார்பற்ற கட்சிகளுடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இணைந்தது. இதன்  மூலம் 40 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் பாஜக எதிர்க்கட்சி யாக மாறியது. முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் 109ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஹரியானா மாநிலம் ஃபதே ஹாபாத்தில் 2022 செப்டம்பர் 25அன்று இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) நடத்திய மாபெரும் பேர ணியும் பாஜக எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி யை முடிவுக்குக் கொண்டுவர அனை த்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பேரணி யில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஹரி யானா பேரணியில் கலந்து கொள்ளாத  சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கம்மம் கூட்டத்தில் இணைந் தார். கேரளா, பஞ்சாப், தில்லி மற்றும்  தெலுங்கானா மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட இந்த பேரணி, பாஜ கவின் வகுப்புவாத அரசியலின் பாசி சத் தன்மைக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. திரிபுராவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலில், 300 தொகுதிகளுக்கு மேல் பெற்ற போதி லும், பாஜக 37.4 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றது. பாஜக கூட்டணிக்கு  ஒட்டுமொத்தமாக 45 சதவீத வாக்கு கள் கிடைத்தன. ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம் மற்றும் சிவ சேனா போன்ற முக்கிய மாநிலக் கட்சிகள் பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறின. சிவசேனாவின் ஒரு பகுதி மட்டுமே தற்போது பாஜக வுடன் உள்ளது.