states

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இப்போதைக்கு சாத்தியமில்லை தனிநபர் வருமானத்தில் உலகில் 142-ஆவது இடத்திலேயே இந்தியா உள்ளது!

ஹைதராபாத், டிச. 27 - இந்தியா, 5 டிரில்லியன் டாலர் என்ற  பொருளாதார இலக்கைக் கொண்டிருந்தா லும், அதற்கு சராசரியாக 9 சதவிகித ஜிடிபி  அவசியம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசு கையில் இதுதொடர்பாக சி. ரங்கராஜன் மேலும் கூறியிருப்பதாவது: ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP)  அடிப்படையில் இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடும்போது சர்வதேச நாணய நிதி யத்தின் தரவுகளின்படி 197 நாடுகளில் இந்தியா 142-ஆவது இடத்திலேயே உள்ளது. எனவே, நாட்டின் நிதிக் கொள்கையை வகுப்பவர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நல்ல முயற்சி தான். இருப்பினும், இந்த இலக்கை அடைய, ஆண்டுக்கு 9 சதவிகித அளவில் வளர்ச்சி இருக்க வேண்டும். இதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும். அப்போது இந்தியாவின் தனிநபர் வரு மானம் 3 ஆயிரத்து 472 டாலராக  (சுமார்  ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம்) இருக்கும்; இந்தி யாவும் அப்போது நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும். ஆனால் அதற்காக  நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்; ஓட வேண்டும். கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன்  போரின் விளைவுகளை அடுத்து, எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு  தெளிவான பாதையை அமைக்கவேண்டும். வளர்ச்சி விகிதத்தை 7 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். பின்னர் அதை 8 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரை  உயர்த்தவேண்டும். தொடர்ச்சியாக ஆறு முதல் ஏழு ஆண்டு களுக்கு அதிக  வளர்ச்சியை காட்டினால், இந்தியப் பொருளாதாரம் அதன் இலக்கை அடையும். இவ்வாறு சி. ரங்கராஜன் தெரிவித்துள் ளார்.