states

img

திரிபுரா மாநில முன்னாள் அமைச்சர் காலமானார்

அகர்தலா, பிப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில மூத்த தலைவரும் பழங் குடி மக்களின் தலைவர்களில் ஒருவரு மான நாராயண் ரூபினி மாரடைப்பால் வியாழனன்று இரவு மருத்துவமனை யில் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்த அவர் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பால் அவர் காலமானார். முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி லும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தம்மை இணைத்துக் கொண்டுவாழ்நாள் முழுவதும்  பழங் குடியின மக்கள் மற்றும் ஏழை மக்க ளின் உரிமைகளுக்காகப் போராடியவர் நாராயண் ரூபினி ஆவர். திரிபுரா இடது முன்னணி அரசில் அவர் அமைச்சராக வும் இருந்தார். அவரது உடல் பிஷல்கரை அடுத் துள்ள சாரிலத்தில் வெள்ளியன்று தக னம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமா னோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில மூத்த தலைவரும் பழங்குடி மக்களின் தலைவர்களில் ஒருவருமான நாராயண் ரூபினி மாரடைப்பால் வியாழன் இரவு  காலமானார். அவரது உடலுக்கு பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், மாணிக்சர்க்கார், திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திரசவுத்ரி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.