states

img

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்

திருவனந்தபுரம், ஜூலை 18-                         மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, கார்கே, ராகுல்  காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலை வர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பெங்களூருவில் நேரில் அஞ்  சலி செலுத்தினர். உடல்நலக்குறைவால் பெங்களூருவில் செவ்வாயன்று காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்  சாண்டி உடலுக்கு சோனியா காந்தி, மல்லி கார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கர்நாடக  முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்  உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு,  பெங்களூரில் இருந்து அவரது உடல் ஏர்  ஆம்புலன்ஸ் விமானத்தில் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. உடல் முதலில் திரு வனந்தபுரத்தில் உள்ள அவரது புதுப்பள்ளி இல்லத்திலும், அதன் பிறகு தர்பார் ஹாலுக்கும், பின்னர் தலைமைச் செயலகம்  மற்றும் கேபிசிசி அலுவலகம் அருகே உள்ள  ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கும் கொண்டு  செல்லப்பட்டது. ஜகதியில் உள்ள அவரது வீட்டிற்கு இரவில் மீண்டும் கொண்டு வரப்  பட்டது. புதனன்று காலை 7 மணிக்கு கோட்டயம் கொண்டு செல்லப்படும். அங்கு திருநகரி மைதானத்தில் முதலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். பின்னர் மாலையில் புதுப்பள்ளியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். மறுநாள் (வியா ழன்) மதியம் இரண்டு மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறும்.

பினராயி விஜயன் இரங்கல்

முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார். நானும் உம்மன் சாண்டியும் 1970இல் ஒரே நாளில் சட்டமன்ற உறுப்பினர்களானோம் என பினராயி விஜயன் நினைவு கூர்ந்துள்ளார். “உம்மன்சாண்டியுடன் கேரள அரசிய லில் ஒரு முக்கியமான அத்தியாயம் முடி வுக்கு வருகிறது. கேரள அரசியலில் உம்மன்  சாண்டி விட்டுச் சென்ற பல அம்சங்கள் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அவர் ஒரே தொகுதியில் இருந்து பலமுறை தேர்ந்தெ டுக்கப்பட்டு சட்டசபைக்கு வந்தார். இவ்வாறு  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான சட்ட மன்ற வாழ்க்கையை முடித்தார். தேர்தலின் ஒரு கட்டத்தில் கூட தோல்வி என்றால் என்ன  என்று அவருக்கு தெரியவில்லை. உலக நாடா ளுமன்ற வரலாற்றில் சிலரால் மட்டுமே செய்ய முடிந்த விஷயங்கள் இவை. உம்மன் சாண்டி சத்தியப்பிரமாணம் செய்ததில் இருந்து சட்டசபை உறுப்பின ராகவே இருந்து வந்தார். கே.கருணாகரன், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட பல காங்கி ரஸ் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பி னர்களாகச் சென்றுள்ளனர். சட்டமன்றம் உம்மன் சாண்டிக்கு எப்போதும் பிரியமா னது. அவர் அதை விடவில்லை. கேரள மக்க ளுடனான அவரது உறவிற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை” என  முதல்வர் பினராயி விஜயன் தெரிவித் துள்ளார்.