states

அதானியால் உணவு தானிய விலைகள் கடுமையாக உயரப்போகின்றன மோடியை அகற்றாவிட்டால் விவசாயத்தை அழித்து விடுவார்!

புதுதில்லி, அக். 26 - புல்வாமா தாக்குதல், விவ சாயிகள் போராட்டம், கவுதம் அதானி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு கடைசியாக ஆளுநராக இருந்த மாலிக், சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலை ஆளும் பாஜக அரசியல் ரீதியாகப் பயன்படுத்தியதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குற்றஞ்சாட்டினார். இதனை ராகுலுக்கு அளித்த பேட்டியிலும் சத்யபால் மாலிக் மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார். 2019 புல்வாமா தாக்குதலுக்கு அரசின் தவறே காரணம் என்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “இது எங்கள் (அரசாங்கத்தின்) தவறு  என்று நான் இரண்டு தொலைக் காட்சிகளுக்கு  பேட்டியளித்துள்ளேன். ஆனால் இதை எங்கும் சொல்ல வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது அறிக்கைகள் விசாரணையை பாதிக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணையே நடத்தப்படவில்லை. அது தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலை பிரதமர் மோடி அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இந்த புல்வாமா தாக்குதல் ஏன் நடந்தது? மத்தியப் பாதுகாப்பு படை யினர் 5 விமானங்களை கேட்டு கடிதம் எழுதியிருந்தனர்.  என்னிடம் கேட்டி ருந்தால் நான் அதை வழங்கி யிருப்பேன். தில்லியில் விமானங்களை பெறுவது மிக வும் எளிதான ஒரு விஷயம்.  ஆனால் பாதுகாப்புப் படை யினர் அனுப்பிய கடிதம் 4 மாதங்கள் உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் இருந்தது, பின் அது நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்புப் படையினர் ஆபத்து நிறைந்த சாலையை பயன்படுத்த நேரிட்டது. சிஆர்பிஎப் வாகனத்தைத் தாக்கிய வெடிகுண்டு ஏற்றப்பட்ட டிரக் சுமார் 10-12 நாட்களாக அந்தப் பகுதியில் சுற்றி வந்துள்ளது. அந்த வெடிபொருட்கள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டவை. வாகன ஓட்டி மற்றும் வாகன உரிமையாளர் மீது பயங்கரவாத செயல்கள் தொடர்பாக புகார்கள் பதிவாகி இருந்தன. இருப்பினும் அவர்களை பலமுறை கைதுசெய்து விடுவித்துள்ளனர். அவர்கள் உளவுத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோது குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்தது, ஆனால் இன்னும் அது செயல்படவில்லை. அதானி பெரிய குடோன்களைக் கட்டி பயிர்களை குறிப்பிட்ட விலைக்கு வாங்கிவிட்ட காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு உணவு தானியங்களின் விலை அதிகரிக்கும். இந்த முறை (2024-இல்) மோடியை நீக்காவிட்டால், அவர் விவசாயத்தை அழித்து விடுவார், அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார். அதுதான் அவர்களின் எண்ணம். அப்படித்தான் அக்னிவீர் (திட்டம்) கொண்டு வந்து, இராணுவச் சேவையையும் ஒழித்துக் கட்டினார். இவ்வாறு சத்யபால் மாலிக் பேசியுள்ளார்.