பெங்களூரு, ஏப்.11- இந்துக்களின் வாக்கு களை ஒருங்கிணைப்பதற் காகவே பாஜக மத பிரச்ச னைகளைத் தூண்டிவிடு கிறது என்று, கர்நாடக முன் னாள் முதல்வரும் மதச்சார் பற்ற ஜனதாதளம் தலைவரு மான குமாரசாமி குற்றம் சாட்டி யுள்ளார். பெங்களூருவில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி யில் குமாரசாமி மேலும் கூறி யிருப்பதாவது: உடுப்பியில் 6 முஸ்லிம் மாணவிகளால் ஹிஜாப் விவ காரம் தொடங்கியது. கல்லூரி அளவிலேயே தீர்வு கண்டி ருந்தால் இந்த விவகாரம் மாநி லம் முழுவதும் பரவி இருக் காது.
ஆனால் அரசே அந்த விவகாரம் பிற பகுதிகளிலும் பரவ அனுமதித்தது. ஹலால் இறைச்சி வாங்க வேண்டாம் என்று சில இந்து அமைப்பு கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தன. அதை யும் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் மக்கள் ஹலால் இறைச்சிக்கு எதிரான பிரச்சா ரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்து கோவில்களின் அருகே முஸ் லிம் வியாபாரிகள் கடைகளை வைக்க அனுமதி இல்லை என்று பிரச்சாரம் செய்தனர். முஸ்லிம்களுக்கு எதிராக பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட கோலார், ராம நகரில் விவசாயிகளிடம், முஸ் லிம் வியாபாரிகள் மாம்பழம் கொள்முதல் செய்கிறார்கள். பாஜக அரசு விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற வற்றில் இருந்து மக்களின் கவ னத்தை திசைத் திருப்ப முயற்சி செய்கிறது. இந்துக் கள் வாக்குகளை ஒருங்கி ணைக்கவே மதப்பிரச்சனை களை பாஜக தூண்டி விடு கிறது. இவ்வாறு குமாரசாமி கூறி யுள்ளார்.