states

img

ஜம்மு - காஷ்மீர் செல்வத்தை ஒன்றிய அரசு சுரண்டுகிறது...

ஸ்ரீநகர், ஏப். 4 - காஷ்மீர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை நேரில் சந்தித்துப் பேசினர். அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வீடுகளுக்கே டெலிவரி செய்யும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட்களை (Reliance JioMarts) காஷ்மீர் முழுவதும் நிறுவு வதற்கு, ஒன்றிய அரசு உதவு கிறது என்பதை முப்தியிடம் முறையிட்டனர். அதுதொடர்பான தரவுகளையும் வழங்கினர். வங்கிக் கடன் பெற்று, நேரடி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தங்களால், ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனத்தின் ஆன்லைன் விற்பனையுடன் போட்டிப் போட முடியாது என்றும், மேலும் பெருநிறுவனங்கள் தங்களது இடத்தை பிடித்துவிட்டால், கழுகு போல அனைத்தையும் விழுங்கி விடுவார்கள் என்றும் கவலை தெரிவித்தனர். அவற்றைக் கேட்டுக்கொண்ட மெகபூபா முப்தி, “ஒன்றிய அரசு ஜம்மு - காஷ்மீரின் பொரு ளாதாரத்தை வலுவிழக்க செய்வ தாகவும், காஷ்மீரின் செல்வங் களைச் சுரண்டுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.  

“ஒன்றிய பாஜக அரசு, ஒரு  புறம் காஷ்மீரில் உள்ள வணிகர் களை அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட ஏஜென்சிகள் மூலம் அச்சுறுத்தி வருகிறது. மறு புறம் நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி அனைத்தையும் சுரண்ட நினைக்கும் பெரு முதலாளிகளுக்கு உதவுகிறது. ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீரையும் ஒன்றிய அரசு வெளியாட்களின் விற்பனைக்காக வைத்துள்ளது, வெளியிலிருந்து வரும் பெருமுதலாளிகள் தங்கள் தன்னிறைவுக்காக இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை, உள்ளூர் வணிகர்களையும், பொரு ளாதாரத்தையும் அழிக்கும். இந்த விவகாரத்தில் ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.