states

img

இன்று ஒரு நாடு; ஒரே தேர்தல், நாளை ஒரே கட்சி; ஒரே தலைவரா?

புதுதில்லி, செப். 4 -  ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற திட்டம் நடைமுறை ரீதியாக சாத்தியமற்றது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி கூறியுள்ளார்.  பாஜக-வின் இத்தகைய தேசியவாதம் நாட்டை ஆபத்தில் கொண்டுபோய் விடும் என்றும் குரேஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயகத் திருவிழா!

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு குரேஷி பேட்டி அளித்துள்ளார்.  அதில், “’ஒரு நாடு ஒரே தேர்தல்’ என்ற  பேச்சு கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரு கிறது. இதில் சில நன்மைகள் மற்றும் சில  தீமைகள் உள்ளன. அடிக்கடி தேர்தல் நடத்துவதால் பெரும் செலவு ஏற்படுவ தாகவும், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படு வதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. அது ஏழை களின் பண்டிகையாகும், ஏனெனில் வாக்கு மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே சக்தி” என்று குரேஷி கூறியிருக்கிறார். “இன்று ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று  சொல்பவர்கள், நாளை ‘ஒரே நாடு, ஒரே  அரசியல் கட்சி ஏன் கூடாது?’ என்று கேட்க லாம். பிறகு, ‘ஒரே கட்சி, ஒரே தலைவர்’ ஏன் இருக்கக்கூடாது? என்றும் சொல்ல லாம்; அவ்வாறு கிளம்பினால் அதற்கு முடிவே இல்லை. நாட்டின் பெயரால் நீங்கள்  (பாஜக ஆட்சியாளர்கள்) பரப்பும் இந்த தேசியவாதம் எங்கே போய் முடியும்.. அதை எப்படி அடைவீர்கள்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா!

“இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு மற்றும் மாநிலங்களின் ஒன்றியம் என்ப தால், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற  திட்டம் அரசியலமைப்பு ரீதியாக சாத்திய மில்லை” என்பதை சுட்டிக்காட்டி யிருக்கும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, “நாடு முழு வதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டுமானால், சில சட்டப்பேரவை களின் பதவிக்காலத்தை அதிகரிக்க  வேண்டும், மேலும் சில சட்டப்பேரவை களின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டும்” என்று தெரிவிக்கும் அவர், “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறை ரீதி யாக சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார். “நாடு முழுவதும் ஒரே நேரத் தில் தேர்தலை நடத்த வேண்டு மானால், சில சட்டப்பேரவை களின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டும், மேலும் சில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை குறைக்க வேண்டும்”  என்று தெரிவிக்கும் அவர், “ஒரே நேரத்தில் தேர் தல் நடத்துவது நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை” என்று கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையர்கள் கோல்ப் விளையாடலாம்..

“தேர்தல் ஆணையத்தைப் பொறுத்த வரை, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்து வது மிகவும் எளிதானது, ஏனெனில் இந்த செயல்பாட்டில் ஒரு முறை மட்டுமே வாக்குப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதே வாக்காளர், அதே வாக்குச் சாவடி மற்றும் மாவட்டத்தின் அமைப்பும் ஒரே மாதிரியாகவே இருக்கப் போகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தனித்தனியாக செய்யப்பட வேண்டியதில்லை. எனவே, இது தேர்தல் ஆணையத்திற்கு மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் 5 ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்திவிட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கோல்ப் விளை யாடலாம்” என்று கிண்டலாக குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை

மேலும், “ஒரே நாடு, ஒரே தேர்தலில் ஒருமுறை மட்டுமே பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதுவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்கு வதற்காகவே இருக்கும். எனினும், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாங்கி, அவற்றைச் செயல்பட வைக்க முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறிதான். இது தொடர்பான விவாதங்களும் நீண்டகாலம் பிடிக்கக் கூடியது. இந்தச் சூழலில் பணப்பட்டுவாடா, தேர்தல் நேரத்தைக் குறைப்பது ஆகிய மாற்றுத்தீர்வுகளைப் பற்றி பரிசீலிக்கலாம்” என்றும் குரேஷி ஆலோசனை வழங்கியுள்ளார்.