states

2021-22 நிதியாண்டிற்கு ரூ. 30 ஆயிரத்து 307 கோடிதான் ரிசர்வ் வங்கியின் உபரி, ஈவுத்தொகை குறைந்தது!

புதுதில்லி, மே 23- ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி வரும் உபரி மற்றும் ஈவுத்தொகை, 2021-22 நிதியாண்டில் ரூ. 30 ஆயிரத்து 307 கோடியாக குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டு தோறும் பத்திர முதலீடுகள் மூலம் கிடைக் கும் வருவாயில், ரூபாய் நோட்டுகள் அச்சி டுதல், நாணயங்கள் தயாரித்தலுக்குப் பிறகு அதனிடம் உபரியாக இருக்கும் தொகையில் ஒரு பகுதியை ஒன்றிய அரசுக்கு அளிக்கும். ஆர்பிஐ அளிக்கும் உபரித் தொகையை, நெருக்கடியில் உள்ள தொழில் துறைகளின் வரிகளைக் குறைக்கவும், கடன்களைக் குறைக்கவும், வீட்டுவசதித் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிதி நிறுவனங்களுக்கு அதிக நிதி அளிக்கவும் ஒன்றிய அரசு பயன்படுத்தும். 1934-ஆம் ஆண்டு ஆர்பிஐ துவங்கியது முதல் இந்த முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின், ஈவுத்தொகையைத் தாண்டி உபரி நிதியில் கைவைக்கும் வேலையை ஆரம்பித்தது. திடீரென  ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்வ தற்காகவே, அந்த உபரி நிதி பராமரிக்கப் பட்டு வந்த நிலையில் அதையும் சூறையாட முயன்றது. அந்த வகையில், 2019-20 நிதி யாண்டில் சுமார் 1 லட்சத்து 23 ஆயிரத்து 414 கோடி ரூபாயை ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றது. 2020-2021 நிதியாண்டில் கொரோனா தொற்று காலத்தில், 9 மாதத்திற்கு மட்டும் 99 ஆயிரத்து 122 கோடி ரூபாயை உபரி மற்றும் ஈவுத்தொகையாக வாங்கிக் கொண்டது.  இந்நிலையில், ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற 596-ஆவது ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில், 2021-2022 கணக்கியல் ஆண்டிற்கான உபரியாக ரூ. 30 ஆயிரத்து 307 கோடியை ஒன்றிய அரசுக்கு மாற்று வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத- ஒன் றிய அரசு எதிர்பாராத குறைந்தபட்ச அளவாகும். ரிவர்ஸ் ரெப்போ வட்டியை வங்கிகளுக் குச் செலுத்தியதும், திடீரென ஏற்படும் நிதிச்  சவால்களை எதிர்கொள்வதற்காக (Contin gency Risk Buffer) வைத்துள்ள நிதி கை யிருப்பை 5.50 சதவிகிதமாகவே ஆர்பிஐ தொடர்வது என்று எடுக்கப்பட்ட முடிவுமே இந்த ஆண்டு ஆர்பிஐ அளிக்கும் உபரித் தொகை குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.