states

‘நீட்’ விலக்கு மசோதாவில் எப்போது கையெழுத்திடுவீர்கள்?

ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பெற்றோர் வாக்குவாதம்

சென்னை, ஆக.12- ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதா விவகா ரத்தில் எப்போது கையெழுத்திடுவீர்கள் என்று, பாதிக்கப்பட்ட பெற்றோர் நேருக்கு நேராக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தங்களின் மகள் ‘நீட்’ தேர்வில் தற்போது வெற்றிபெற்றிருந்தாலும், அதற்  காக தாங்கள் ரூ. 20 லட்சம் தனியார்  பயிற்சி மையங்களுக்கு செலவிட்டிருப்ப தாகவும், ஆனால், வசதியற்ற ஏழை மாண வர்கள் ‘நீட்’ தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல்தான் திணறிக் கொண்டி ருக்கிறார்கள் என்றும், ‘நீட்’ தேர்வுக்குப் பின்னால் ஒரு சதி இருக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர், ஆளுநர் ரவி  முன்பாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி,  ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்  மாளிகையில், சிவில் சர்வீஸ் தேர்வு களுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும்  பல்வேறு உயர் கல்வி கற்கும் மாண வர்களை அழைத்து தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறார். இதுவரை 4 முறை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தமுறை ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலை ஆளுநர் ரவி சனிக் கிழமையன்று ஆளுநர் மாளிகையில் நடத்தினார். 2023-ஆம் ஆண்டில் ‘நீட்’ தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல்  பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆளுநர் ரவி, மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் கலந்து ரையாடினார். அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை, “தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இதனை எதிர்பாராத ஆளுநர் ஆர்.என். ரவி, “நீட் தேர்வுக்கு தடை கோரு வதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும்  அதிகாரம் தனக்கு இருந்தாலும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத் துள்ளேன்” என்று சமாளித்தார். இதையடுத்து, “பணம் இருந்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடி கிறது” என்றும், “பல லட்சம் செலவிட்டு, பயிற்சி மையங்களுக்குச் சென்றால்தான், நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது.. நாங்களே ரூ. 20 லட்சம் செலவிட்டுள்ளோம். அதன்மூலம்தான் எங்களது மகள் நீட் தேர்வில் வெற்றிபெற முடிந்திருக்கிறது.. ஆனால், வசதியற்ற ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாண வர்கள் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பதே தெரியாமல் திணறிக் கொண்டி ருக்கிறார்கள்” என்று சேலம் மாணவியின் தந்தை கூறினார். அதற்குப் பதிலளித்த ஆளுநர் ரவி,  “நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த அவசி யமும் இல்லை. பள்ளியில் படிக்கும் போதே, ஆழமாக கவனித்துப் படித்தால் நீட்  தேர்வில் வெற்றி பெறலாம். ஒவ்வொரு முறையும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரு வது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கி விடும். மாணவர்கள் வேறு பிரச்சனைக்காக தற்கொலை செய்யும் போது அரசியல்வாதிகள் ரூ. 10  லட்சம், ரூ. 20 லட்சம் என கொடுத்து கொடுத்து நீட் தேர்வால்தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்” என்றார்.

அப்போது, “நீட் தேர்வு இல்லாம லேயே, தமிழ்நாட்டு மாணவர்கள் பலர் சாத னைகளைப் படைத்துள்ளனர். நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாடு, இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குகிறது. நீட் தேர்வுக்கு முன்பே மருத்துவ கட்டமைப்பும் மருத்துவ கல்லூரி யின் கட்டமைப்புகளும் தமிழ்நாட்டில் நன்றாகத்தான் இருந்தது” என்று சேலம்  மாணவியின் தந்தை கூற, ஆளுநர் கடும் கோபம் அடைந்தார். “நீங்கள் சொல்வது  தவறு. அது போல் தமிழகத்தில் மருத்துவ  கட்டமைப்புகள் இல்லை. நீங்கள் உட்கா ருங்கள் என்று சப்தமிட்டார். இதையடுத்து, மாணவியின் தந்தையிடமிருந்த மைக்கும்  பறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஆளுநர் மாளிகை யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருப்பதுடன், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி ஆணவத்துடன் கூறி யிருப்பதற்கு கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன. நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்  களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில்  அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டி ருந்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண்களே 569-தான் எனவே, ஆளுநர் நடத்திய நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களோ, அவர்களது பெற்றோர்களோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.