states

img

வெள்ளத்தில் மிதக்கும் அசாம் 5.35 லட்சம் பேர் பாதிப்பு; 11 பேர் பலி இருளில் தவிக்கும் 2,000 கிராமங்கள்

வெள்ளத்தில் மிதக்கும் அசாம்

5.35 லட்சம் பேர் பாதிப்பு; 11 பேர் பலி   இருளில் தவிக்கும் 2,000 கிராமங்கள்

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வார காலமாக கன மழை புரட்டியெடுத்து வரு கிறது. குறிப்பாக கடந்த வாரத்தின் 7  நாட்களில் 4 நாட்கள் “ரெட் அலர்ட்”  எச்சரிக்கையுடன் அதீத அளவில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால்  அசாம், சிக்கிம், அருணாச்சலப்பிர தேசம், மிசோரம், திரிபுரா, மேகாலயா,  மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள் வெள் ளத்தில் சிக்கி உருக்குலைந்துள்ளன.  இதில் அசாம் மாநிலம் கனமழை யால் மிக மோசமான அளவில் பாதிப்பை  சந்தித்துள்ளது. அசாமில் இன்னும் ஆரஞ்சு எச்சரிக்கையுடன் கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் மொத்த முள்ள 35 மாவட்டங்களில் 22 மாவட்  டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரு கின்றன. அதாவது 22 மாவட்டங்களின் 1,254 கிராமங்களில் சுமார் 5.35 லட்சம்  பேர் கனமழை வெள்ளத்தால் இயல்பு நிலையை இழந்துள்ளனர். அதிகபட்ச மாக கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 1,94,172  மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்  ளனர். மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகி யுள்ளனர். பலர் காணாமல் போயுள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

165 நிவாரண முகாம்கள்

மாநிலம் முழுவதும் மொத்தம் 165 நிவாரண முகாம்களில் 31,212 இடம்  பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்  ளனர். அதே நேரத்தில் மேலும் 157 நிவா ரணப் பொருட்கள் விநியோக மையங்க ளும் செயல்பட்டு வருவதாக செய்திகள்  வெளியாகியுள்ளன.  

இருளில் தவிக்கும் கிராமங்கள்

பலத்த மழையால் சாலைகள், பாலங்கள், வீடுகள், மின் கம்பங்கள் போன்ற பிற உள்கட்டமைப்புகள் கடு மையாக சேதமடைந்துள்ளன. இத னால் மாநிலத்தின் 2,000க்கும் மேற்பட்ட  கிராமங்கள் கடந்த 4 நாட்களாக இரு ளில் மூழ்கியுள்ளன. இதுதொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கை மேற் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முடங்கியது போக்குவரத்து

அதே போன்று அசாம் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள தால் சாலை, ரயில் மற்றும் படகு சேவை கள் முழுமையாக முடங்கியுள்ளன. குறிப்பாக முக்கிய நகரங்கள் துண்டிக்  கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவ சியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

கனமழை நீடிக்கும்

துப்ரி, தெற்கு சல்மாரா மங்காச்சார், கோல்பாரா மற்றும் கோக்ரஜார் உள்  ளிட்ட 11 மாவட்டங்கள் வரும் நாட்க ளில் “ஆரஞ்சு “எச்சரிக்கையுடன் கன மழையை எதிர்கொள்ளும். இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அசாமில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வானிலை அறிக்கையை கோட்டை விட்ட அசாம் பாஜக அரசு

மேற்குவங்கத்தை நோக்கி காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்த போதே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவமழையால், வடகிழக்கு மாநிலங்க ளும் பலத்த காற்றுடன் கனமழையை எதிர்கொள்ளும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து  இருந்தது. ஆனால் அசாம் பாஜக அரசு இந்த எச்சரிக்கை யை கண்டுகொள்ளாமல் பாகிஸ்தான், வங்கதேச மக்கள் என முஸ்லிம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மட்டுமே முக்கிய மக்கள் பணியாக மேற்கொண்டு வந்தது. அம்மாநில பாஜக அரசு வானிலை அறிக்கையை கவ னத்தில் எடுத்துக்கொண்டு கனமழையை எதிர்கொள்ள தீவிரமாக செயல்பட்டிருந்தால், அசாம் இவ்வளவு பெரிய  மோசமான நிலைமையை சந்தித்து இருக்காது.  

மோடி புகழ் பாடுவதே  ஹிமந்தா பிஸ்வாவின் வேலையா?

அசாம் மாநிலத்தில் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி குளம் போல காட்சி அளிக்கின்றன. இதுதொடர்  பாக தீவிர நடவடிக்கை எடுக்காமல் அசாம் முதல மைச்சராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தினமும், “பிரதமர் மோடி அசாம் வெள்ள நிலைமையை தொலை பேசி வாயிலாக கேட்டறிந்தார்; உருக்கமாக பேசினார்; உருகினார்; வருத்தப்பட்டார்; ஒன்றிய அரசின் முழு ஆத ரவை வழங்குவோம் என்று கூறினார்” என மோடி புகழ்  பாடுவதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால்  நிவாரணப் பணி, மக்கள் மீட்பு, பாதுகாப்பு எச்சரிக்கை, உணவு, இருப்பிடம் தொடர்பாக பேச மறுக்கிறார்.

 5 லட்சம் பேரின் பசியை போக்க  என்ன நடவடிக்கை?

அசாமில் கனமழை வெள்ளத்தால் மொத்தம் 5.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வெறும்  31,212 பேர் மட்டுமே நிவாரண முகாம்களில் தங்கியுள்ள னர். மீதம் 5 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருகின்ற னர். அவர்களின் பசியை போக்க அசாம் பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது? அதற்கான திட்டம்  என்ன? என்பது தொடர்பாக சிறுஅளவு செய்தி கூட வெளி யாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.