பெய்ஜிங்: மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க புதிதாக ஐந்தாண்டுத் திட்டத்தை மக்கள் சீனம் உருவாக்கியிருக்கிறது. நாட்டு வளர்ச்சிக்கான திட்டமிடல் என்பதைத் தொடர்ந்து சீனா கடைப்பிடித்து வருகிறது. ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய பணி களைத் திட்டமிட்டு, நிறைவடையும் நேரத்தில் பணிகள் எந்த அளவுக்கு மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பதையும் சீன அரசு ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கான பணிகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாப்போல நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது. தற்போது 2021-25ஆம் ஆண்டுகளுக்கான திட்டத்தை மக்கள் சீனம் நடைமுறைப் படுத்தும் பணியில் உள்ளது. கொரோனா பாதிப்பு புதிய சில திட்டங்களுக்கு இட்டுச் சென் றுள்ளது. பெருந்தொற்றின்போது மூத்த குடிமக்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளா கினர். இதைக் கணக்கில் கொண்டு மூத்த குடிமக்களின் உடல்நலனைப் பேணுவதற்கான புதிய திட்டத்தை ஐந்தாண்டுத் திட்டமாக நிறைவேற்ற சீன அரசு திட்டமிட்டுள்ளது.
பெருந்தொற்று மற்றும் பல்வேறு வகையானா நோய்கள் ஆகியவற்றிலிருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாப்பது என்று மட்டுமின்றி, வயதானவர்கள் அதிகமாக இருக்கும் நாடு என்ற அடிப்படையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் வகை யிலும் இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தற்போது மூத்த குடிமக்க ளுக்கு உள்ள மருததுவ வசதிகளை விரிவுபடுத்துவது, சிகிச்சைகளை மேம்படுத்துவது மற்றும் புதுமையான முறையில் சேவை ஆகியவற்றை குறிப்பான இலக்குகளாக இந்தத் திட்டம் எடுத்துக் கொண்டுள்ளது. இவற்றில், மூத்த குடிமக்களுக்கான படுக்கை வசதிகள், தனியாக மருத்துவ மையங்கள் மற்றும் செவிலியர் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேற அம்சங்கள் இடம் பெற்றி ருக்கின்றன. இந்தத் திட்டம் நிறைவேற ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதாரம் முன்னேற வேண்டிய அவசியம் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள சீன அரசு, ஐந்தாண்டுத் திட்டத்தின் பலனாக மனித உழைப்பு நேரம் அதிகமாகும் என்று குறிப்பிட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டின் கணக்குப்படி, சீன மக்கள் தொகையில் 60 வயதிற்கு மேற் பட்டோர் 18.7 விழுக்காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.