states

img

தில்லி உப்ஹார் தியேட்டரில் தீ விபத்து


தில்லியின் கிரீன் பார்க் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உப்ஹார் தியேட்டரில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தியேட்டருக்குள் இருந்த மரச்சாமானில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். 
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
கடந்த 1997ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி உப்ஹார்  தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.