புதுதில்லி,ஜன.3- பெண் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா, எதிர்க்கட்சிகளின் தொடர் வலி யுறுத்தலை தொடர்ந்து ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆய்வுக்குழு வில் ஒரே ஒரு பெண் உறுப்பினருக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கக்கூடியது அல்ல என்று திமுக எம்.பி., கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி, சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்பட பல பெண் எம்.பி.க்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், பெண்களின் குறைந்தபட்ச திரு மண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர் த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இத ற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதா குறித்து கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்தவுள்ளது. இந்த ஆய்வு குழுவில் 31 எம்.பிக்கள் இடம்பெற்றுள் ளனர். ஆனால் ஒருவர் மட்டுமே பெண். அவர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சுஷ்மிதா தேவ். இந்த குழுவின் தலைவராக பாஜகவை சேர்ந்த வினய் சஹஸ்ரபுத்தி உள்ளார். 31 பேர் கொண்ட குழுவில், அதுவும் பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்யும் குழுவில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததற்கு கடும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் பெண்களை சேர்க்க அழுத்தம் கொடுப்போம் என்றும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் சரியான கருத்தை தெரிவிக்கக்கூடிய அதிகமான பெண் எம்பிக்கள் குழுவில் இருக்க வேண்டும் என்றும் என்சிபி எம்பி சுப்ரியா சுலே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்யும் குழுவில் ஒரே ஒரு பெண் எம்பி மட்டும் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக எம்.பி. கனிமொழியும் ஆய்வுக்குழு வில் ஒரே ஒரு பெண் எம்.பி. மட்டும் நிய மித்து உள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 110 பெண் எம்.பி.க்கள் உள்ளோம். ஆனால், பெண்ணுக் கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30 பேர் ஆண்கள். பெண் களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர்.பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.