பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தொழில்துறை மேம்பாட்டு ஆணையக அலுவலகத்திற்கு வெளியே விவசாய உரிமை மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் கடந்த 108 நாட்களாக இரவு, பகல் பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அரசு, வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதால் போராட்டம் 100 நாட்களை கடந்து உறுதியோடு நடக்கிறது.